india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தில் மிக உயர்ந்த இட மாக கருதப்படும் சந்தக்பூ பகுதியில் நடப்பு குளிர்பருவத்தின் பனிப்பொழிவு காலம் வெள்ளியன்று தொடங்கிய நிலையில், அங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

தெலுங்கானா சட்டமன்ற தற்காலிக சபாநாயக ராக ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்பருதீன் ஓவைசி ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஓவைசியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.   

உத்தரகண்ட் மாநிலம் கான்பூர் தொகுதி பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ உமேஷ் குமார் விபச்சார தொழில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகிய நிலையில், இதுதொடர்பான வீடியோ  ஆதாரத்தை முன்னாள் எம்எல்ஏ பிரணவ் குமார் வெளியிட்டுள்ளார்.

ஆந்திராவின் வாக்காளர் பட்டியலில் முறை கேடு நடந்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே மெழுகு வர்த்தி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி யை கைப்பற்றிய நிலையில், ரோஷன் யாதவ் என்பவர் தனது  “ரோஷன் யாதவ் ஜிகேபி அஹிர்” என்ற பேஸ்புக் கணக்கில் ஆர்எஸ்எஸ் தொடர்பான கார்ட்டூனை வெளியிட்டதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது இந்தூர் காவல்துறை.

ஆன்லைன் கேமிங், பந்தயம், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம் மற்றும் லாட்டரி போன்றவற்றை அதிகபட்ச ஜிஎஸ்டி  வரியான 28 சதவீதத்தில் கொண்டு வருவதற்கான திருத்த மசோதா மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க இந்திய  வங்கிகள் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழ கத்தின் நூலகம் அருகே இருதரப்பு மாணவர் களுக்குள் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் மாணவி படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.