“ஒரு சட்டத்தை எல்லாக் கோணங்களிலும் சரி பார்த்த பின்னரே, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அவசரம் அவ சரமாக தாக்கல் செய்துவிட்டு, 4 ஆண்டுகள் காலம் கடத்தி, தேர்தல் தேதி அறிவிக்க உள்ள சில நாட்க ளுக்கு முன் அமல்படுத்துவது, பொது மக்களைப் பிளவுபடுத்தி, இறை யாண்மையைச் சிதைக்கத் துடிக்கும் பாஜகவின் உள்நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. ஒரு வேளை மீண்டும் பாஜக ஆட்சி அமை யுமானால், என்ன மாதிரியான இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
தொடர் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் கண்டு கொள்ளாமல், இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் நோன்பு தொடங்கியிருக்கும் முதல் நாளில், இந்த அவலத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.
சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவ தற்காகத்தான் இந்தச் சட்டம் என்ற கூற்று உண்மை யானால், பல்வேறு இன்னல்களைச் சந்தித்த இலங்கைத் தமிழர்களைப் பட்டியலில் சேர்க்காதது ஏன்?
இந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டப்பேரவைகளிலும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மக்களை மதம், மொழி, இனத்தால் பிளவுபடுத்தும் முயற்சிகளை முறியடிப்போம். தேசம் காப்போம்.
கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்