புதுதில்லி, டிச. 25- ஒன்றிய பாஜக அரசு புதிதாக கொண்டுவந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியர சுத் தலைவர் ஒப்புதல் அளித்துள் ளார். இதன் மூலம் அந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
1860இல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய தண்ட னை சட்டம், குற்றவியல் நடை முறை சட்டம், இந்திய சாட்சி யங்கள் சட்டம் ஆகிய 3 குற்ற வியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் தற்போதும் அமலில் உள்ள நிலையில், இவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பார தியா நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ மசோதா என இந்தி மொழியிலான மூன்று மசோதாக்களை மோடி அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்தது.
மேலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த வாரம் மக்களவை, மாநிலங் களவை என இரு அவைகளிலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் மூன்று குற்றவியல் சட்ட மசோ தாக்களை நிறைவேற்றியது. பின்னர் அவற்றை குடியரசுத் தலை வர் திரவுபதி முர்முவின் ஒப்புத லுக்காக வெள்ளியன்று அனுப்பி வைத்தது.
இந்நிலையில், வெறும் 4 நாட் களில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கும் திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனை யடுத்து 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் தற்போது அமலுக்கு வந்துள்ளன.