புதுதில்லி, ஜன. 2 - ஓட்டுநர்களை குற்றவாளிகளாக் கும் வகையில், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டப்பிரிவு களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் அறி வித்த வேலைநிறுத்தம் தீவிர கட்டத்தை எட்டியது. 2-ஆவது நாளாகவும் லாரிகள் ஓடாத தால், பெட்ரோல், டீசல், எல்பிஜி சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகினர்.
பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. பழைய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கிறோம் என்ற பெயரில், ஒன்றிய பாஜக அரசானது, கடந்த வாரம், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா என்ற பெயரில் புதி தாக மூன்று குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டப் பிரிவு களுக்கு அப்போதே பரவலாக எதிர்ப்பு எழுந்தது.
குறிப்பாக விபத்து தொடர் பான சட்டம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு செல்வோர் மீது, தற்போது ஐபிசி (இந்திய தண்டனைச் சட்டம்) பிரிவு 304A-இன் கீழ் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படுகிறது.
ஆனால், மோடி அரசின் புதிய சட்டத்தில், சாலை விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 7 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. “சாலை விதிகளின் முக்கியத்து வம் அனைவரும் மதிக்க வேண்டிய ஒன்று. அதேநேரம், ஓட்டுநர்கள் யாரும் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்து வதில்லை. குறிப்பாக, லாரி ஓட்டு நர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பக்க பலமாக இருப்பவர்கள்.
விநி யோக சங்கிலியை தக்கவைப்பவர்கள். ஆனால், ஒன்றிய அரசின் இந்த புதிய சட்டம் ஓட்டுநர்களை குற்றவாளி களாக்க முயற்சிக்கிறது. இதனால் ஓட்டு நர் பணிக்கு புதிதாக யாரும்வரமாட் டார்கள். ஓட்டுநர் தரப்பினரிடம் கலந்தா லோசிக்காமல் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று எதிர்ப்பு தெரி வித்த ஓட்டுநர்கள், இச்சட்டத்தை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அகில இந்திய வாகன போக்குவரத்து சங்கம் மூன்று நாட்கள் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டது. அதன்படி ஜனவரி 1 அன்று தொடங்கிய லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம், இரண்டாம் நாளான செவ்வா யன்று மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் துவங்கிய போராட்டம், மெல்ல மெல்ல ராஜஸ்தா னிலும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் லாரி ஓட்டுநர்கள் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேடா, வல்சாட், கிர், சோம்நாத், பாருச் மற்றும் மேஷனா மாவட்டங்களின் வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்கள் போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேஷனா - அம்பாஜி நெடுஞ்சாலை, அகமதாபாத் - இந்தூர் நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.
அகமதாபாத் - வதோ தரா நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீ சார் தடியடிப் பிரயோகமும்நடத்தினர். இந்தப் போராட்டத்தால், எல்பிஜி சிலிண்டர் விநியோகம், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சிலிண்டர் நிரப்பும் மையங்களில் இருந்தே சரக்கு செல்லவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழ மையன்றும் வேலைநிறுத்தம் தொடர்கிறது.