india

img

அமலாக்கத்துறையின் அடுத்த குறி லாலு குடும்பம்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் “இந்தியா” கூட்டணி தலை வர்களை பிரச்சாரம் செய்ய விட்  டால், பாஜக கடு மையாக அம்ப லப்படும் என்பதை உணர்ந்துள்ள மோடி அரசு, ஜார்க்கண்ட் முன் னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்,  தில்லி முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை மத் திய அமைப்புகள் மூலம் கைது செய்து  சிறையில் அடைத்துள்ளது. இதே வகை யில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களையும் குறிவைத்து மத்திய அமைப்புகள் மூலம் ஒன்றிய பாஜக அரசு நெருக்கடி அளித்து வருகிறது. 

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் செல்வாக்கு கொண்ட ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுவின் குடும்பத்தை மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க விடாமல் தடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது. ரயில்வே நிலமோசடி வழக்கில் லாலு குடும்பத்தைச் சேர்ந்த வர்களை மிக விரைவில் கைது செய்ய அமலாக்கத்துறை களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.