india

img

காற்று மாசுபாடு எதிரொலி : தில்லியில் முளைக்கும் தற்காலிக மருத்துவமனைகள்

தில்லியில் கடந்த 2 மாத காலமாக காற்றின் தரம் வெகுவாக குறைந்து 400-ஆக உள்ளது. தற்பொழுது குளிர்காலம் வேறு தொடங்கியுள்ள நிலையில், காற்று மாசுபாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது. இதனால்  தில்லி மக்கள் சுவாச பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் தில்லி மெளலானா ஆசாத் மருத்துவக்கல்லூரி ஆங்காங்கே தற்காலிக மருத்துவமனைகளை தொடங்கி மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.  மேலும் தொண்டு நிறுவனங்களும் ஒரு சில இடங்களில் மருத்துவ உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.