india

img

பாசிச பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்; ‘கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்’

ஒன்றிய அரசின் பாரபட்ச மான நிதி ஒதுக்கீட்டை கண்  டித்தும், மாநில உரிமைகள்  மற்றும் கூட்டாட்சிக் கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், தில்லி,  ஜந்தர்மந்தரில் கேரள மாநில முதல்  வர் பினராயி விஜயன் அவர்கள் தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று ஆற்றிய உரை வருமாறு:-

மோடி அரசால்  மோசமான அரசியல் சூழல்

நான் முதலீடுகளை ஈர்ப்பதற் காக ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு, நேற்றுத்தான் தாயகம் திரும்பினேன். அதன் கார ணமாக, என்னால் இந்தப் போராட்  டத்தில் பங்கெடுக்க முடிய வில்லை. எங்களுடைய கட்சியின் சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனி வேல் தியாகராஜன் மற்றும் எம்.பிக்  களை அனுப்பினேன்.

கேரளத்தில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய உங்களை தில்லிக்கு வந்து போராட்டம் நடத்த வைத்த மிகமோசமான அரசியல்  சூழலை நினைத்து வருத்தப்படு கிறேன். புதனன்று (பிப்.7) கர்நாடக  மாநில முதல்வர் சித்தராமையா  அவர்களும் தில்லிக்கு வந்து  போராட்டம் நடத்தி இருக்கிறார்.

மாநிலங்களை மதிக்காத இன்றைய பிரதமர்

இன்று திமுகவைச் சேர்ந்த நாடா ளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிதிப் பகிர்வில் தங்களின் மாநி லத்திற்குப் பாரபட்சம் காட்டப்படு வதற்கு எதிராக அனைத்து மாநி லங்களும் போராட்டம் நடத்துகிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்குக் காரணமான ஒன்றிய பாஜக அரசு மக்கள் மன்றத்தில் பதில்சொல்ல வேண்டிய நாள்  வெகு தொலைவில் இல்லை. ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி. சிங்  அவர்கள் பிரதமராக இருந்த போது, தமிழ்நாட்டின் முதல்வர்- தலைவர் கலைஞர் அவர்களிடம் ஒரு கருத்தை சொன்னார்: “தமிழ் நாட்டின் கோரிக்கைக்காக நீங்கள்  ஒருமுறை கூட தில்லிக்கு வரத்  தேவையில்லை. அப்படி ஒரு சூழ் நிலையை உருவாக்க மாட்டேன்,  தமிழ்நாட்டில் இருந்தபடியே சொன்  னால் போதும், நிறைவேற்றித் தரு வேன்” என்றார். மாநிலங்களை மதிக்கிற, மாநில மக்களையும் மதிக்  கின்றவர்களாக முந்தைய பிரத மர்கள் இருந்தார்கள். ஆனால், பிர தமர் நரேந்திர மோடி அவர்கள் –  மாநிலங்களை முனிசிபாலிட்டி களை போல நினைக்கிறார்.

நிதி, கல்வி, மொழி சட்ட உரிமைகள் பறிப்பு
மாநிலங்கள் இருப்பதோ - மாநி லங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதோ –அவருக்குப் பிடிக்க வில்லை. இத்தனைக்கும் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்து, அதன்பிறகு பிரதமர் ஆனவர் அவர். ஆனால், பிரதமர் ஆனதும் அவர் செய்த முதல் செயல், மாநி லங்களின் உரிமையைப் பறித்தது தான். நிதி உரிமையைப் பறித்தார்;  கல்வி உரிமையை பறித்தார்; மொழி  உரிமையை பறித்தார்; சட்ட உரிமை யை பறித்தார்.

மாநிலங்களின் நிதி உரிமையை  பறிப்பது ஆக்சிஜனை நிறுத்து வதற்குச் சமம். அதைத்தான் பாஜக  அரசு செய்து வருகிறது. இது ஏதோ  எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்க ளுக்கு மட்டும் நடக்கிறது என்று பாஜக முதலமைச்சர்கள் நினைக்க வேண்டாம். நாளை உங்கள் மாநி லங்களுக்கும் இதே கதிதான் என்று  எச்சரிக்கையாகவே கூற விரும்பு கிறேன்.

எதேச்சதிகாரத்தை எதிர்த்து மாநிலங்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்
பாஜக அரசின் இந்த எதேச்சதி கார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியோடு போராடி  வருகிறது. அதே பாணியில், கேரள  முதல்வர் தோழர் பினராயி விஜயன்  அவர்களும் போராடி வருகிறார். ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு மாபெரும் நிதி நெருக்கடிப் பேரி டரை எல்லா மாநில அரசுகளும் சந்திக்கிறோம்.

அனைத்து மாநில அரசுகளை யும் ஒன்றிணைத்து ஆளக்கூடிய  ஒன்றிய அரசு, இந்த நிதி நெருக்கடி யை நீக்கும் வகையில் செயல்பட  வேண்டும். ஆனால் அப்படிச் செயல்படவில்லை. மாநிலங்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக கடன்  வாங்குவதற்கு கூட தடையை ஏற் படுத்துகின்றனர். மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதி யளிப்பதற்கான பொதுக்கடன் என்  பது, இந்திய அரசமைப்புச் சட்டத் தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது. மக்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்வது மாநில  அரசுகள்தான்.

கேரள முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள்!
மாநில அரசிடம்தான் எல்லா அன்றாடத் தேவைகளையும் மக்  கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால்,  அதற்கு பாஜக அரசு முட்டுக்கட்டை  போடுகிறது. இதை எல்லாரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாக வேண்  டும். ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள்  நம்முடைய ஒற்றுமையின் மூல மாக, இந்திய அரசைக் கைப்பற்றி,  பாசிச பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! அனைத்து மாநிலங்க ளையும் மதிக்கும் – சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உரு வாக்குவோம்! தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கும் கேரள அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.