india

img

பெகாசஸ் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசியல் கட்சித்  தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் செல்போன்கள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து, பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக விவகாரத்தில் சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் என். ராம் உள்ளிட்டோர் பொது நல மனுத் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

;