புதுதில்லி, ஜூன் 11 - எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புக்களுக்கான ‘நீட்’ (National Entrance-cum-Eligibility Test - NEET) தேர்வில் மிகப்பெரிய அளவிற்கு மோச டிகள் நடைபெற்றுள்ளதாக எழுந்து ள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து, தேசிய தேர்வு முகமை (National Testing Agency - NTA) பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘நீட்’ (NEET-UG 2024) தேர்வில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக கூறி, ஜூன் 1 அன்று சிவாங்கி மிஸ்ரா உட்பட 10 மாணவர்கள், உச்ச நீதிமன்ற த்தில் வழக்கு தொடுத்தனர். அதில், 2024-ஆம் ஆண்டுக்கான தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தர விட வேண்டுமென்று வலியுறுத்தி யிருந்தனர்.
இந்த மனுவை, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றத் தின் விடுமுறைக் கால அமர்வு விசா ரித்தது. மாணவர்கள் தரப்பில் வழக்க றிஞர்கள் ஜே. சாய் தீபக், மேத்யூஸ் ஜே. நெடும்பரா ஆகியோர் வாதாடினர்.
அவர்கள், “நீட்’ யுஜி-2024 முறை கேடுகளால் நிறைந்துள்ளது. வினாத் தாள் முன்கூட்டியே கசிந்துள்ளது. இது அரசியலமைப்பின் கீழ் பிரிவு 14 (சமத்துவத்திற்கான உரிமை)-ஐ மீறுவ தாகும்” என்று வாதங்களை வைத்த னர். நீட் தேர்வையே ரத்து செய்து, மறு தேர்வு நடத்துவதுடன், தற்போதைய மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கும் தடை விதிக்கக் கோரினர்.
அப்போது, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் இதர படிப்புகளுக் கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அதேநேரம், “தேர்வு விஷயத்தில் அதனுடைய மாண்பு பாதிக்கப்பட்டுள்ளது” என்றும்; எனவே, நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த னர்.