india

img

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தை விடவும் அதிகம்

புதுதில்லி, பிப். 2 - கடந்த 20 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 658 தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், இதில், மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சிக் காலத்தை விடவும், நரேந்திர மோடி  தலைமையிலான பாஜக ஆட்சியில் தான் அதிகமான தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் என்ப தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. “இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்கள் சிறை  பிடிக்கப்படுவது பற்றியும் அவர்களை மீட்கவும் அவர்கள் மீதான வன் முறை பிரயோகத்தை தடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நட வடிக்கைகள் என்ன?” என்று மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் (சிபிஎம்) எழுப்பிய கேள்விக்கு (எண் 44/02.02. 2024) வெளியுறவு இணையமைச்சர் வி. முரளிதரன் பதில் அளித்துள்ளார்.  அதன்படி பாஜக ஆட்சியில் உள்ள 2014 முதல் 2024 வரையிலான காலத்தில் 3 ஆயிரத்து 137 இந்திய மீன வர்கள் இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். 2004  முதல் 2013 வரை யிலான (மன் மோகன் சிங்  ஆட்சி) காலத்தில் 2 ஆயிரத்து 915 பேரும்,  வாஜ்பாய் ஆட்சி யில் இருந்த 2003 இல் 606 பேரும் சிறைப் பிடிக்கப்பட்டனர்.

கடந்த 3  ஆண்டுகளில் மட்டும் இந்திய மீன வர்கள் மீது 13 தாக்குதல்களை அண்டை  நாடுகளின் கடற்படைகள் தொடுத்துள் ளன. அண்டை நாட்டுச் சிறைகளில் விடு விக்கப்படாமல் தற்போது இருப்பவர் கள் 266 பேர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2005-ல் மட்டுமே ஒரு தாக்கு தல், கைது கூட இல்லை.  

கைது, தாக்குதல் பற்றிய தகவல் வந்தவுடன் இந்திய அரசு ராஜீய உற வுகள் வாயிலாக தொடர்பு கொண்டு  விடுவிக்க முயற்சிகளை மேற்கொள்ளப் படுகின்றன. தூதரக பணியாளர்கள் சிறைகளுக்கு சென்று கைதிகளின் பாதுகாப்பு, நலம் விசாரிக்கப்படு கின்றன. சட்ட உதவிகள் செய்யப்படு கின்றன. இரு தரப்பு தீர்வு முறைமை கள் உள்ளன. மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் பல வந்தம் இல்லாமல் அணுகுமாறு அண்டை நாடுகளின் அரசுகளை கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார். 

அரசியல் உறுதியுடனான நடவடிக்கை தேவை!
ஒன்றிய இணையமைச்சர் அளித்த இந்த புள்ளிவிவரங்கள் தொடர்பாக தனது கருத்தைப் பதிவிட்டுள்ள சு.  வெங்கடேசன் எம்.பி., ஒன்றிய அரசு, புள்ளி விவரங்களையும், வழக்கம் போல அலுவல் ரீதியான வார்த்தை களை மட்டுமே பிரயோகித்துள்ளது. ஆனால், அரசியல் உறுதியுடன்கூடிய நடவடிக்கையே தேவைப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது வருந்தத் தக்கது. ஆகவே இரு தரப்பு ஒப்பந்தம் உணர்வுப் பூர்வ மாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.