india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜனநாயக சக்திகளை இணைத்துப் போராட்டம்
விசிக அறிவிப்பு

“குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதச் சார்பின்மையை சிதைக்கும், மதத் தின் பெயரால் மக்க ளைப் பிளவுபடுத்  தும், இஸ்லாமியர் களுக்கு எதிரான வெறுப்பைத் தீவி ரப்படுத்தும்; இதன் வழி அரசியல் ஆதா யம் தேடும் பாசிச  ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து  அனைத்து மாவட்டத் தலைநகரங்க ளில் 15.03.2024 (வெள்ளிக்கிழமை) விடு தலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைத்து ஜனநாயக  சக்திகளும் பங்கேற்கும் வகையில்  இவ்வார்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படும்.”

தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

உச்சநீதிமன்றத்தில் ஐயுஎம்எல் வழக்கு

நாடு முழுவதும் ஒன்றிய பாஜக அரசு  அமல்படுத்தியிருக்கும் குடியு ரிமை திருத்தச் சட்டத்திற்கு உடனடி யாக தடை விதிக்க வேண்டும் என இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் (IUML) உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

“மதத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து குடியுரிமை வழங்கப்படும் என்ற  சட்டத்தால், நாட்டில் பதற்றமான, அசாதா ரணமாக சூழ்நிலை உருவாகி உள்ளது” என்று ஐயுஎம்எல் தனது மனுவில் குறிப்  பிட்டுள்ளார்.

மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமை வழங்கப்படும் என்பது அர சியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று ஐயுஎம்எல் தேசிய பொதுச் செய லாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி கூறி யுள்ளார்.

இந்தியர்கள் அனைவருக்கும் எதிரானதே சிஏஏ சட்டம்!
தவ்ஹீத் ஜமாத் அறிக்கை

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்  படுத்தப்பட்டால் முஸ்லிம்கள் மட்  டும் பாதிக்கப்படு வார்கள் என்ற வாதம் அழுத்தமாக வைக்கப்படுகின் றது. ஆனால் இதன்  மூலம் மொழிவாரி யான சிறுபான்மை யினர் மற்றும் நாடோடி இன மக்கள் எனப் பலரும் பாதிக்கப்படுவார்கள்.  இதைக் கருத்தில் கொண்டு தான் பல மாநி லங்களில் சிஏஏவிற்கு எதிராக சட்டமன்  றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2019-ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டு வரப்பட்ட நேரத்தில் கோடிக்க ணக்கான  இந்தியர்கள் போராட்டம் நடத்தி னர். அனைத்து மதத்தினரும் மத வேறு பாடுகளைக் களைந்து போராட்டக் களத்தில் இணைந்ததே இந்தச் சட்டம்  இந்தியர்களுக்கு எதிரானது என்பது  தெளிவாகப் புரிகிறது. முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் நேரத்தில் இந்த அறி விப்பை வெளியிட்டு முஸ்லிம்களை நோவினை செய்ய வேண்டும் என்று ஒன்  றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த எதேச்சதி கார போக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடுமையாகக் கண்டிக்கிறது.

ஆர்.அப்துல் கரீம், 
பொதுச் செயலாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்