india

img

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது தாக்குதல் - சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

தில்லியில் உள்ள நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் மீதான தாக்குதலை தொடர்ந்து, சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். 
நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்களுக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் தில்லி சிறப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நியூஸ் கிளிக் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்கய்ஸ்தா மற்றும் மனிதவள தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் தில்லி சிறப்புப் பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர்.  இந்த நிலையில், மோடி அரசுக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறதாக சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் கூறியதாவது: 
"மோடி அரசுக்கு எதிராக உண்மையைப் பேசும் ஊடக நிறுவனங்களும், பத்திரிகையாளர்களும் துன்புறுத்தலுக்குள்ளாகி மிரட்டப்படுகிறார்கள்.  மோடி அரசு  பிரபல இணையதள ஊடகமான நியூஸ் கிளிக் உடன் தொடர்புடையவர்கள் மீது இன்று கண்மூடித்தனமாக சோதனை நடத்தி வருகின்றது.
ஊடகங்கள் மீது அதிகரித்து வரும் வெட்கக்கேடான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறேன். ஒன்றிணைந்த எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.