புதுதில்லி, பிப். 21 - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை யை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரி வித்துள்ளது. தூத்துக்குடியில் இருக்கும் ‘ஸ்டெர்லைட் ஆலை’யை மீண்டும் திறக்க வேண்டும்; அதேபோன்று ஆலையின் உள்ளே பராமரிப்பு பணி யை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என ‘வேதாந்தா குழுமம்’ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இதுதொடர்பான வழக்கு பிப்ரவரி 14 அன்று விசாரணைக்கு வந்த போது, “தேசிய நலனை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனை களோடு ஸ்டெர்லைட்டை இயக்க அனு மதிக்கலாமா? அவ்வாறு மாநில அரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஒரு நடு நிலையான நிபுணர் குழுவை அமைக்க லாம்” என்று உச்சநீதிமன்றம் ஆலோச னை தெரிவித்தது. ஆனால், நீதி மன்றத்தின் இந்த ஆலோசனைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை புதனன்று (பிப்ரவரி 21)தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா குழுமம் தரப்பில், “நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கை யை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி கள், நிபுணர் குழுவை அமைப்பது குறித்து, தமிழகத்தின் கருத்தைக் கேட்ட னர்.
அப்போது, “ஆலை மாசு ஏற்படுத்தி யுள்ளது என்பதை ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுக்கள் கண்ட றிந்தன. ஜிப்சம், தாமிரக் கழிவுகள் அகற்றப்பட்டதாக தவறான தகவல் களை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே ஆலையை இயங்க அனு மதிக்கக் கூடாது” என்று வாதிடப்பட் டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், “ஆலை அங்கிருந்து வெளியேறு கிறது என்றால் கழிவுகளை யார் அகற்றுவது?” என்றும், “பல்வேறு கடும் நிபந்தனைகள் விதித்து ஆலையை இயக்க அனுமதிக்கலாமே?” என்றும் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு, “கழிவுகளை ஆலை நிர்வாகம்தான் அகற்ற வேண்டும். இல்லையெனில் அவர்கள் செலவில் அரசு அகற்றும். ஏற்கெனவே விதிக்கப்பட்ட எந்த நிபந்த னைகளையும் ஆலை நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை.
அதை செய்யாத இவர்களுக்கு மறுபடியும் நிபந்தனை விதித்தாலும், பின்பற்று வார்கள் என எப்படி நம்ப முடியும்? ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், சுற்றியுள்ள நிலத்தடி நீரை கடுமையாக மாசடைய வைத்துள் ளது. அப்பகுதி நிலத்தடி நீர் குடிப்ப தற்கு ஏற்றதல்ல என்ற நிலை உரு வாகியுள்ளது. அந்த வகையிலேயே ஆலை இயங்கக் கூடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது” என்று விளக்கமாக எடுத்துரைத்தது. இதனையடுத்து, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.
சாமானிய மக்கள் நேரடியாக நீதி மன்றம் வர முடியாது என்றாலும் அவர் களது கவலையை புறந்தள்ள முடி யாது. அதே சமயம், தமிழ்நாடு அர சின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனு மதிக்க முடியாது” என உச்சநீதி மன்றம் அதிரடியாக கூறியுள்ளது.