india

img

எஸ்பிஜி தலைவர் அருண் குமார் சின்ஹா காலமானார்

பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் (SPG) தலைவர் அருண் குமார் சின்ஹா (61) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
1987-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக அருண் குமார் சின்ஹா பதவியேற்றார். இவர் திருவனந்தபுரத்தில் டிஜிபி-ஆகவும், ரேஞ்ச் ஐஜி-ஆகவும், உளவுத்துறை ஐஜி-ஆகவும் மற்றும் நிர்வாக ஐஜி-ஆகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் எஸ்பிஜி அவர் நியமிக்கப்பட்டார். கடந்த மே மாதம் 31ம் தேதி ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சின்ஹா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 

;