கேரள திரைத் துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டு கள் தொடர்பாக விசாரிக்க ஐ.ஜி. தலைமையில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய 7 பேர் கொண்ட குழு அமைத்து கேரள முதல்வர் பின ராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல், பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் பேட்டி அளித்தாலும், புகார் அளிக்க முன்வராததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க 7 பேர் கொண்ட குழு உரிய பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 24 தொகுதி களில் ஆகஸ்ட் 20 அன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. ஆகஸ்ட் 27 அன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில், கடந்த 5 நாட்களில் (ஆகஸ்ட் 25 வரை)வெறும் 14 பேர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சரக்கு, சேவைகள், டிஜிட்டல் வர்த்தகம் உள் ளிட்ட துறைகள் தொடர்பாக இந்திய - ஆஸ்தி ரேலிய தூதுக்குழுவின் 10ஆவது சுற்று பேச்சு வார்த்தை சிட்னியில் (ஆஸ்திரேலிய நகரம்) ஞாயிறன்று நடைபெற்றது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷன், சிறைக்குள் சொகுசு வாழ்க்கையை அனு பவிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவங்கள்; குற்ற வாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” என பிரதமர் நரேந்திர மோடி மகா ராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நடந்த லட்சாதிபதி சகோதரி சம்மேளன நிகழ்வில் பேசினார்.
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றங்கள் அரங்கேறியதாக பாஜக எம்.பி, கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரை மீண்டும் சந்திக்க உள்ள தாகத் தகவல் வெளியாகி உள்ளது.
“ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்ற தேர்த லில் தங்களது மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) செயல் திட்டத்தை ஏற்பதாக காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அறிவித்தால் அத்தனை தொகுதிகளையும் அந்த கூட்டணிக்கே ஒதுக்க தயார்”என முன்னாள் முதல்வரும், பிடிபி தலைவருமான மெகபூபா முப்தி அறிவித்துள்ளார்.