india

தேர்தல் பத்திர விவகாரம்

புதுதில்லி, மார்ச் 13- தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான போராட்டங்களின் பின்னணியில், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தால் மிரண்ட பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) செவ்வாயன்று மாலை தேர்தல்  பத்திர திட்டத்தின் அனைத்து விபரங்களையும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது. 

தொடர்ந்து புதனன்று தேர்தல் பத்திரம் தொடர்பான  தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்ட தாகவும், பென் டிரைவில் இரண்டு கோப்புகளாக தேர்தல்  பத்திரம் தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையத்தி டம் வழங்கியுள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. 

பிரமாணப் பத்திரத்தில் எஸ்பிஐ,”உச்சநீதிமன்றம் இந்தத் திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு, ஏப்ரல் 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 22,030 தேர்தல் பத்திரங்கள் வரவு வைக்கப்பட்டுள்ளன. கடந்த 6 ஆண்டு காலம் விற்பனை செய்த தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரத்தை சுமார் 30 பிரிவுகளாக தேர்தல் ஆணை யத்திடம் வழங்கப்பட்டுள்ளது.இதன் மொத்த மதிப்பு ரூ.16,518 கோடியாகும்” எனக் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எஸ்பிஐ சமர்ப்பித்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15க்குள் அதன் இணையத்தில் பதிவேற்றம் செய்து  வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உரிய நேரத்தில் வெளியிடப்படும் : தலைமை தேர்தல் ஆணையர்
இந்நிலையில் தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் பத்திரம் தொடர்பாக கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்,”இந்திய தேர்தல் ஆணையம் எப்போதும் வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக உள்ளது. எஸ்பிஐ அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும். தேர்தல் பத்திரங்களை பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்துகிறது” எனக் கூறினார்.