2 நாட்களுக்கு முன் சமாஜ்வாதி கட்சி யின் மூத்த தலைவரும், எம்எல்ஏவு மான சுரேஷ்,“நாட்டை ஆளும் பாஜக என்னும் இந்து பயங்கரவாத அமை ப்பு அனைத்தையும் அழிக்கிறது” என குற்றம் சாட்டினார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரி வித்து, பின்விளைவு கள் கடுமையாக இருக்கும் என மிரட்டும் வேலையை துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், “சுரேஷ் எம்எல்ஏ சொல்வது சரி தான். பாஜக ஒரு இந்து பயங்கரவாத அமைப்பு” என சமாஜ்வாதிதலைவர் அகிலேஷ் எம்.பி., கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில், “வெறுப்பைப் பரப்புபவர்கள், பொய்க் கருத்துக்களை விதைப்பவர்கள் மற்றும் சட்டப்படி செயல்படாதவர்கள் என அனைவரும் பாஜகவில் தான் இடம் பெற்றுள்ளார்கள். இவ்வகையான அமைப்பு நாடு முழுவதும் வெறுப்பைப் பரப்பி, சமூக ஒற்றுமையை அழிக்க முயற்சிக்கிறது. அதனால் “பாஜக ஒரு இந்து பயங்கரவாத அமைப்பு” என் பதை தவிர, வேறு எந்த வகையிலும் விவ ரிக்க முடியாது” என அவர் கூறினார்.