india

உ.பி.யில் முந்தும் இந்தியா கூட்டணி!

புதுதில்லி, ஜன.21-  உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், இந்தியா கூட் டணி கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதிகமான (80) மக்க ளவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி ஒன்று பட்டு தேர்தலை சந்திக்க உள்ளன. காங்கிரஸ், பல்லவி படேலின்  அப்னா தளம், சுவாமி பிரசாத் மவுரி யாவின் புதிய கட்சி, சந்திரசேகர ராவின் பீம் ஆர்மி கட்சிகள் சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சிகளு க்கு இடையேயான தொகுதி பங்கீடு புதனன்று நிறைவு பெற்றது.  காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதி கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். “உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்தது.

மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளும், சமாஜ்வாதி கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 17 தொகுதிகளில் ரேபரேலி, கான்பூர்,  அமேதி, பதேபூர் சிக்ரி, பான்ஸ்கான், சஹரான்பூர், பிரயாக்ராஜ், மகா ராஜ்கஞ்ச், பனாரஸ், அம்ரோஹா, ஜான்சி, புலந்த்சாஹர், காசியாபாத், மதுரா, ஹத்ராஸ், பாராபங்கி, டியோரியா ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன” என அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் கட்சியுடனான எங்கள் நல்லுறவு கூட்டணி 11 வலு வான இடங்களுடன் நல்ல தொடக்கத் தில் உள்ளது. இந்தப் பேச்சு வார்த்தை வெற்றிகரமான முடிவை நோக்கி முன்னேறும்; ‘இந்தியா’ அணி யும் ‘பிடிஏ’ (Pichre Dalit and  Alpashankhak- PDA) (பிற்படுத்தப் பட்ட மக்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர்” உத்தியும் வர லாற்றை மாற்றும்” என்று ஏற்கென வே அகிலேஷ் நம்பிக்கையுடன் குறிப்பிட்டிருந்தார். அதுபோலவே, நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தில் இந்தியா கூட்ட ணிக்குள் தொகுதி உடன்பாடு சுமுக மாக நடந்துள்ளது,

நாட்டின் பிறபகு திகளிலும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. மத்தியப் பிரதேசத் தில் சமாஜ்வாதிக்கு கஜூராகோ தொகுதியை காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தா லும், கூடுதலாக 2 இடங்கள் வரை அளிக்கப்படலாம் என்றும், பல்லவி படேலின் அப்னா தளம் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு சமாஜ்வாதி கட்சி களுக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதி யில் இருந்து பகிர்ந்து அளிக்கப் படும் என தகவல்கள் வெளியாகி யுள்ளன.