india

img

சேலம் சிறைத் தியாகிகளின் தியாகத்தை நெஞ்சில் ஏந்துவோம்!

விடுதலைப் போரில் சாதாரண மக்களான உழைப்பாளிகள், தொழிலாளிகள், விவசாயி களை இன்றைய மோசமான நிலைமைகள் மாறும் எனச் சொல்லி விடுதலைப் போராட்டத் தில் ஈடுபடுத்திய கம்யூனிஸ்ட்டுகள் விடு தலைக்குப் பின் ஆளும் காங்கிரஸ் அரசிடம் கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தனர். கோரிக்கைகளுக்கான இயக்கங்களை, போராட்டங்களை ஜனநாயக ரீதியாக நடத்தி னார்கள். உழுபவனுக்கு நிலம் சொந்தமாக்கப் பட வேண்டும். நிலச் சீர்திருத்தச் சட்டத்தை உருவாக்க வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் அமலாக்கப்பட வேண்டும். தொழி லாளிகளின் கூலியை  உயர்த்திட வேண்டும். தொழிற்சங்க உரிமை தரப்பட வேண்டும். பண்ணை அடிமைகளாய் வாழ்ந்த தலித்து களுக்கு விடுதலைக்கான சட்டம் வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து கம்யூனிஸ்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுதந்திர இந்தியாவிலும் நமது நிலை மாறாது என்கிற விரக்தியில் இருந்த சாதாரண ஏழை விவசாய, தொழிலாளி மக்கள் கம்யூ னிஸ்டுகளின் தலைமையின் கீழ் உற்சாகமாக அணி திரண்டு போராட்டத்துக்கு வலு சேர்த்தனர். ஆளும்  அன்றைய நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு நியாயமான கோரிக்கைகளை செவிமடுக்காமல் மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் பெரும் முதலாளிகள், ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்களின் கைப்பாவையாக மாறி இருந்தது. 

கம்யூனிஸ்டுகள் மீது அடக்குமுறை
தேச விடுதலைக்காக கடந்த ஆண்டு வரை தம்முடன் இணைந்து போராடிய சக தோழர்கள் என்பதை மறந்து கம்யூனிஸ்டுகள் மீது கடும் அடக்குமுறையை காங்கிரஸ் ஏவியது. கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தது. முன்ன ணித் தலைவர்களை கைது செய்து சிறை யில் அடைத்தது. 6 மாதம் முதல் 20 ஆண்டு வரை சிறை கிடைத்தது. நாடு முழுவ தும் கம்யூனிஸ்டுகள் சிறைக் கொடுமைக்கு உள்ளானார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கள் மீது சதி வழக்குகள் போடப்பட்டன.  தெலுங்கா னாவில் வீரமிக்க போராட்டம் வெடித்தது. மேற்குவங்கம், கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. தமிழ கத்தில் தஞ்சை, சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை என முக்கிய நகரங்க ளில்  போராட்டம் வெடித்தது. தமிழகத்தில் போராடிய கட்சித் தலைவர்களை வேலூர், கடலூர் சிறைகளில் அடைத்தது. கட்சியின் முன்னணி ஊழியர்களை சேலம், திருச்சி, மதுரை மத்தியச் சிறையில் அடைத்தது. 

சேலம் சிறையில் அன்றைய சென்னை மாகாணத்தின் தமிழக, கர்நாடக, ஆந்திரா, கேரள பகுதியிலிருந்து 350க்கு மேற்பட்ட கம்யூ னிஸ்ட் தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தின் 9 மத்திய சிறைகளில் சேலம் சிறை மிகவும் பாதுகாப்பானது, பரப்பளவு அதிகமானது. இந்தச் சிறைக்கு கருப்புக் குல்லா ஜெயில் என்கிற பெயரும் உண்டு. 

அப்பொழுது தமிழகத்தின் சிறைத்துறை அமைச்சர் மாதவ மேனன். சேலம் சிறை யில், கம்யூனிஸ்ட்களின் எதிரி என சொல்லப்படு கிறது. தாமோதரன் தலைமை வார்டன். கிருஷ்ண  நாயர், ஐயர் பிள்ளை என்கிற இரண்டு கொடூர ஜெயிலர்களும் சேலம் சிறையில் அடக்கு முறையின் அடையாளமாக இருந்தார்கள். கம்யூனிஸ்டுகளை கண்டாலே “நாயேன்ட மகனே” என தொடங்கி இழிசொற்களால் கடுமையாக வசை பாடுகிற தலைமை வார்டன் தாமோதரனின் அராஜக நடவடிக்கை உச்சத்தில் இருந்தது. 

தேச விடுதலைக்காக பாடுபட்டு, சுதந்திரத்திற்கு பிறகு மக்களின் வாழ்வாதாரம் மாறாததால் மக்களுக்காக போராடிய கம்யூனிஸ்ட்டுகள் அரசியல் கைதிகளாக அங்கீ கரிக்காமல் கிரிமினல் கைதிகளை போல கொடுமைப்படுத்தப்பட்டார்கள். புழுக்கள் மிதக்கும் புளித்துப்போன கஞ்சி, சோளக்களி கட்டிச்சோறு, சுத்தமில்லாத குடிநீர் கொடுத்ததால் கம்யூனிஸ்டுகள் சாப்பிட முடியாமல் பெரும் அவஸ்தைக்கு உள்ளானார்கள். ஏராளமான பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடை கள் என அரைக்கால் டிராயர், கிழிந்து போன கோணி, நாற்றம் அடிக்கும் கம்பளியை கொடுத்து பயன்படுத்த சொன்னார்கள். கிரி மினல் கைதிகளை போல குல்லா அணிய வேண்டும், நம்பர் கட்டை அணிய வேண்டும். பெரும் வியாதிகளை உருவாக்கக் கூடிய சுத்தமில்லாத கழிப்பறையை பயன்படுத்த கட்டா யப்படுத்தினார்கள். ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழர்களும் சிறைக் கிணற்றில் நீர் இறைக்க,  நிலத்தில் மாடுகளுக்கு பதில் நுகத்தடியில் கம்யூனிஸ்டுகளை கட்டி இழுக்க வைத்தனர். ரோடு ரோலர்களை கம்யூனிஸ்டுகளை  வைத்து இழுக்க வைப்பது என தோழர்கள் அடித்து கொடுமைப்படுத்தப்பட்டனர்.  

சேலம் ஜாலியன் ்வாலாபாக்

இந்தப் பணிகளை செய்ய மறுத்தவர்கள் கடுமையான தடியடிகளுக்கு உள்ளாக்கப்பட்டார் கள். தினம் தினம் கொடுமையான அடக்குமுறைகளை சந்தித்த கம்யூனிஸ்டுகள் இனியும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது எதிர்த்துப் போராடுவது என முடிவெடுத்தனர். 1948 பிப்ரவரி 7ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை துவக்கினார்கள். மக்களுக்காக போராடிய எங்களை அரசியல் கைதியாக அங்கீகரி, கிரிமினல் கைதிகளை போல சித்ரவதை செய்யாதே என்று உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறை  வார்டன் மற்றும் ஜெயிலர்கள் இந்தப் போராட்டத்தைக் கண்டு பெரும் கோபம் கொண்டார்கள். சிறைப் போராட்டச் செய்திகள் வெளியே சென்று விடுமோ என்கிற அச்சத்தில் கடுமையான அடக்குமுறைக்கும் துணிந்தார்கள். தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். 

எத்தனையோ மிரட்டல்களை சிறை நிர்வாகம் விடுத்த போதும், கம்யூனிஸ்டுகள் அரசியல் கைதிகளாக எங்களை மதிக்க வேண்டும், நம்பர் கட்டை அணிய மாட்டோம், குல்லா அணிய மாட்டோம், சுகாதாரமான உணவு வேணும், கழிப்பறை சுத்தமாக்கப்பட வேண்டும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் வேண்டும் என்று முழங்கினார்கள். போராட்டம்  தீவிரமானது. பிப்ரவரி 11ஆம் தேதி இந்திய நாடே சேலம் சிறையில் நடந்த சம்ப வங்கள் கேட்டு  பதற்றமான சூழ்நிலை உரு வானது. ஆம், சேலம் சிறையில் கைதிகளை ஏதோ, காக்கை குருவிகளை போல சுட்டு வீழ்த்திய கொடுமை நடந்தது. 

1919 ஏப்ரல் 13ஆம் தேதி சுதந்திரப் போராட் டத்தில் பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலா பாக்கில் நடைபெற்ற கொடூரத்தை நினைவு படுத்துகிற வகையில், சேலம் சிறையில் அந்த கொடூரம் நிறைவேறியது. சிறை ஜெயிலர் கிருஷ்ணன் நாயர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் கம்யூனிஸ்டுகள் அடைக் கப்பட்டிருந்த அனக்ஸ் பகுதிக்கு துப்பாக்கிக ளோடு திரண்டார்கள். துப்பாக்கிகளுடன் அணிவகுத்த போலீசை கண்டு அஞ்சி, நடுங்கா மல் சிறை நிர்வாகத்திற்கு எதிராக ,ஆட்சிக்கு எதிராக கோஷமிட்டார்கள். ஆனால் சிறை நிர்வாகம் கண்மூடித்தனமாக  தடியடி பிரயோகம் நடத்தியது. வேறு வழி இல்லை. கோழைகளாக ஓடி ஒளிய முடியாது.  தற்காப்புக்காக போரா டித்தான் ஆக வேண்டும் என கற்களை எடுத்து வீசினார்கள். எதிர்த் தாக்குதலை காவலர்கள் எதிர்பார்க்கவில்லை. கம்யூனிஸ்டுகளை பார்த்து துப்பாக்கி முனைகள் திரும்பின. அந்த நேரத்தில் கூட சற்று வயதில்  மூத்த தோழர்கள், இளம் தோழர்களை பின்னுக்குத் தள்ளி தங்கள் மார்பை உயர்த்தி துப்பாக்கி முனைக்கு எதிரே நின்று தீரத்துடன் போராடினார்கள். ஜெயிலர் கிருஷ்ணன் நாயர் கொடூரமாக கத்திக் கொண்டே சுடுவதற்கு உத்தரவிட்டான். 

சேலமே இரத்தச் சிவப்பானது
ஐயகோ...தேச விடுதலைக்காக வெள்ளை யர்களை எதிர்த்துப் போரிட்ட கம்யூனிஸ்டுகள் சுதந்திர இந்தியாவில் கொடூரமாக சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். 19 தோழர்கள்  குண்டடிபட்டு மடிந்தார்கள். 121 க்கு மேற்பட்ட தோழர்கள் கடுமையான படுகாயம் அடைந்து சேலம் சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் தெருவெல்லாம் ரத்தமும் சதையுமாக சிதறிக் கிடந்தன என அடுத்த நாள் பத்திரிகைகள் எழுதின. கம்யூ னிஸ்ட்களின் ரத்தம்  சேலம் சிறையை மட்டு மல்ல, சேலம் தெருக்களையும் சிவப்பாக்கியது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூன்று கம்யூனிஸ்டுகள் இறந்து போனார்கள். ஏராளமான கம்யூனிஸ்ட்கள் கை,கால், உடல்களில் குண்டடிபட்டு மற்றும் தடியடியில் கை கால் உடைந்து பெரும் சித்ரவதைக்கு உள்ளானார்கள். 

சேலம் அரியா கவுண்டம்பட்டி சார்ந்த ஆறுமுக பண்டாரமும், திருச்செங்கோடு காவேரி முதலியாரும், கடலூர் சேக் தாவுத்து தியாகிகளா னார்கள். திருச்செங்கோடு காவேரி முதலியா ரின் மகனும் கம்யூனிஸ்ட்டுமான சேஷாசலம் பக்கத்து அறையில் இருந்து கொண்டு தந்தை யும் இறந்தார் என்ற செய்தி அறியாமல் சுடப்படும் குண்டுகள் எத்தனை ரவுண்டு என வேதனையோடு எண்ணிக் கொண்டிருந்தார் துப்பாக்கிச் சூட்டில் தனது தந்தையும் இறந்து விட்டார் என கேட்டு கதறி அழுதார். இறந்த  தந்தை யின் உடலை கூட பார்க்க விடாமல் சிறை நிர்வாகம் தடுத்தது. 

குண்டடிபட்டு இறந்த 22 தோழர்களின் உடல்களை தர மறுத்து சிறை வளாகத்திற் குள்ளேயே யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்தது. இந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து அடுத்த நாள் இந்தியா முழு வதும் கண்டன இயக்கம் நடைபெற்றது. சோஷலிஸ்ட் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் நாரா யணன் உள்ளிட்ட தலைவர்கள் வட மாநிலங்க ளில் போராடினார்கள். இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஜனநாயக சக்திக ளும் தெருவில் இறங்கி போராடினார்கள். திருச்செங்கோடு வி.ராமசாமி, சூரியம்பாளையம் சேஷாசலம், சேலம் உத்தமலிங்கம் போன்ற தலைவர்கள் நம் முன் இறுதிவரை சிறைக் கொடு மைகளை அனுபவித்த சாட்சிகளாய் இருந்து வாழ்த்து மடிந்தார்கள்.ஐந்து குண்டுகளுடன் உயிர் தப்பிய நாராயண நம்பியார் கண்ணூரில் வாழ்ந்தார். கேரளா அரசு அவருக்கு பட்டயம் வழங்கி கௌரவித்தது. 

தியாகம் வீண் போகவில்லை
அன்றைய ஒன்றிய அரசிலும் இந்த சம்பவம் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. சிறைத் துறையில் நிர்வாகச் சீர்கேடுகளை களையவும் முறையான சிறைவிதிகளையும் அமலாக்குவதற்கான சூழ்நிலை உருவானது. ஆம், இன்றைய அரசியல் கைதிகள் இந்தியா முழுவதும் சிறையில் அனுபவிக்கிற அத்தனை வசதிகளுக்கும் கம்யூனிஸ்டுகளே அடித்தளம் இட்டவர்கள். கம்யூனிஸ்டுகள் சேலம் சிறையில் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை. இந்திய நாடு ஜனநாயக ரீதியான அரசியல் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டிய தேவையை உருவாக்கி யது. அரசியல் கைதிகளுக்கு உரிய மரியாதை வழங்க சட்டம் இயற்றப்பட்டது. 75 ஆண்டுகள் பூர்த்தியாகியும் சேலம் சிறை தியாகிகளின் அந்த தியாக வரலாறை  நமது நெஞ்சம் மறக்க வில்லை. 

கார்ப்பரேட், மதவெறி பாசிஸ சக்திகளை எதிர்த்து வீரியமான போராட்டத்தை நடத்த வேண்டிய இக்காலத்தில், சேலம் சிறை தியாகிகளின் தியாகத்தை நெஞ்சில் ஏந்து வோம்!