புதுதில்லி, பிப். 2 - ஜார்க்கண்ட் முதல்வராக இருந்துவந்த நிலையிலேயே, அவரை ராஜினாமா செய்ய வைத்து, அமலாக்கத்துறை மூலம் கைது செய்த ஒன்றிய பாஜக அரசின் அராஜ கத்தைக் கண்டித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 31 அன்று குடியரசுத் தலைவர் உரை யுடன் துவங்கி நடைபெற்று வரும் நிலை யில், பிப்ரவரி 1 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டிற்கான இடைக் காலப் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 2 அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்கியது.
ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல்
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் களைப் மிரட்டிப் பார்க்கும் விதமாகவும், பழி வாங்கும் விதமாகவும் ஒன்றிய பாஜக அரசு, ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள், ஜார்க்கண்ட் அரசியல் சூழல் குறித்து, நாடாளுமன்றத் தில் விவாதிக்க வேண்டும் என்று வெள்ளி யன்று கோரிக்கை விடுத்தன.
ஆனால், அந்தக் கோரிக்கை ஏற்கப் படாத நிலையில், ‘ஹேமந்த் சோரன் கைது, ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று முழக்கங்களை எழுப்பியபடி மக்க ளவை - மாநிலங்களவை என இரண்டு அவை களிலிருந்தும் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த அமலாக்கத்துறை மூலம் முயற்சி
முன்னதாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய், “அம லாக்க இயக்குநரகம் போன்ற அரசு இயந்தி ரங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த ஒன்றிய அரசு விரும்பு கிறது” என்று குற்றம் சாட்டினார். “பீகார் முதல்வர் சமீபத்தில் தனது ராஜினாமா கடி தத்தை சமர்ப்பித்தபோது, அன்று மாலையே ஆளுநர் புதிய அரசாங்கத்திற்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். ஆனால், ஜார்க்கண்ட் விஷயத்தில் ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தபோது, புதிய ஆட்சியமைக்க ஆளுநர் 10 நாட்கள் அவகாசம் அளிக்கிறார்” என்று சாடினார்.
ஜார்க்கண்ட்டில் நடப்பது அரசியலமைப்புக்கு விரோதம்
“ஜார்க்கண்டில் நடப்பது அரசிய லமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே, அங்கு என்ன நடக்கிறது என்பதில் மாநிலங் களவைத் தலைவரின் கவனத்தையும், ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தையும் திரட்ட முயற்சித்தோம். இது பாஜக-வின் ஜனநா யகத்தின் மீதான தாக்குதல். ஆனால், அதைப் பற்றிப் பேச எங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது வருத்தமளிக்கிறது” என்றும் கோகோய் குறிப்பிட்டார்.
நிதிஷ் குமார் 15 நிமிடங்களில் முதல்வராக்கப்பட்டது எப்படி?
இதே பிரச்சனையை, மாநிலங்களவை யில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுப்பினார். பீகாரில் “நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார், 15 நிமிடங் களில் அவர் உரிமை கோரவும் புதிய அமைச் சரவையை முன்மொழியவும் அனுமதிக்கப் பட்டார். ஆனால், ஜார்க்கண்டில் 43 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டிருந்தும், புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் கால தாமதம் செய்தார்” என்று தெரிவித்தார்.
“பிரதமர் மோடிக்கு முன் இருந்த அர சாங்கங்கள் திறமையாக செயல்படவில்லை என்ற கூற்றுகளையும் மறுத்த கார்கே, தேசத் தை ஸ்தாபித்தவர்களை மறந்துவிடக் கூடாது” என்றார்.
பிராமணர்களுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள்தான் சூத்திரர்களா?
“’பிராமணர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்களுக்கு சேவை செய்வது ஒரு சூத்திரனின் கடமை’ என்று அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா-வின் ‘எக்ஸ்’ தளப் பதிவைச் சுட்டிக்காட்டி, இது போன்ற மொழியில் பேசும் இந்த நாட்டின் முதல்வர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
கேரள ஆளுநர் மாநில அரசுடன் மோதல் கடைப்பிடிப்பது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் டி.வி. சிவதாசன் எம்.பி. பேசினார். அரசியலமைப்புக் கடமையை மீறும் ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் குறித்து அவர் கேள்விகளை முன்வைத்தார்.
மிக்ஜம் புயலுக்கு ஒரு பைசா நிதியைக் கூட ஒதுக்காதது ஏன்?
அண்மையில் தமிழ்நாட்டில் 2 கோடி மக்களை பாதித்த மிக்ஜம் புயல் மழை சேத த்தை ஒன்றிய அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டும், ஒரு பைசா கூட நிதி வழங்கப்படவில்லை என்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு மக்களவையில் பிரச்சனை யைக் கிளப்பினார். இது “தமிழ்நாட்டின் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மை” என்ற பாலு, உதாரணத்திற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணி களில் இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படா ததை குறிப்பிட்டார். நீட் தேர்வு விலக்கு, இரண் டாம் கட்ட மெட்ரோவுக்கான நிதி ஒதுக்கப் படாததையும் சுட்டிக்காட்டினார்.