உத்தரகாண்டில் வயல்வெளியில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் கட்டிமா கிராமத்தில் வயல்வெளியில வழக்கம்போல் மக்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது துணியில் சுற்றப்பட்டு பச்சிளம் குழந்தை மண்ணில் அரைகுறையாக புதைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.