india

img

ராமர் கோவிலோடு அடங்கப் போவதில்லை ஆர்எஸ்எஸ் - பாஜக

ஜனவரி 22 அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் மூலம் இந்துத்துவா கோட்பாட்டின்கீழ் அரசையும், மதத்தையும் கலக்கும் செயல் அடையாளப்படு த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ததன் மூலம் இது அரசால் நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்வு என்று அடிக்கோ டிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

அயோத்தி விழா மூலம் அரசின் சித்தாந்தம்  இந்துத்துவா என்று பிரகடனம் செய்யப்படு கிறது. அயோத்தி விழாவையொட்டி, அதற்கு பக்தர்களைத் திரட்டும் வேலையில் அரசும், சங் பரிவாரக் கும்பல்களும் இரண்டறக் கலந்து முயற்சிகளை மேற்கொண்டன.

பாஜகவின் தேர்தல் ஆதாயத் திட்டம்

வரவிருக்கும் ஏப்ரல்/மே மாதங்களில் நடை பெறவிருக்கும் மக்களவைத் தேர்தல்களில் பாஜக அதிகபட்ச ஆதாயம் அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு, அயோத்தி விழாவை நடத்திடத் தீர்மானிக்கப்பட்டது என்பது தெளிவானதாகும். ஜனவரி 22 அன்று நாடு முழுதும் வீடுகளிலும், கோவில்களிலும் இத னைக் கொண்டாட வேண்டும் என்று கூறப்பட்டி ருப்பது மட்டுமல்ல; ஒவ்வொரு மாநிலத்தி லிருந்தும், நாடாளுமன்ற தொகுதியிலிருந்தும் அயோத்திக்கு பக்தர்களையும், ஆதரவாளர் களையும் மார்ச் மாதத்தின் இறுதிவரை கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கின்றது. ஆனாலும், ராமர் கோவில் கட்டுவதிலும் அயோத்தி நகரத்தை மறுசீரமைப்பு செய்வதி லும் இந்துத்துவாவாதிகளுக்கு ஆழமான நோக்கம் உண்டு.

இது, இந்துத்துவாவையும், அரசு அதிகாரத்தையும்  ஒருங்கிணைப்பதைக் குறிக்கிறது. ராமர்கோவில் கும்பாபிஷேகத்தில் நரேந்திர மோடிக்கு முக்கியப் பங்கினை அளிப்ப தன் மூலம், அவர் பிரதமராகவும், ராம ராஜ்ஜி யத்தின் மூலவராகவும் அடையாளப்படுத்தப் படுகிறார். அவர், கடவுளாலும் மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவராம்.

“கும்பாபிஷேகத் தின்போது அனைத்து இந்திய மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக கடவுள் என்னை உருவாக்கியுள்ளார்” என்று அவர் தனக்குத்தானே கூறிக்கொண்டிருக்கிறார். இது இந்துத்துவா பாணியில் ஆட்சி செய்வதற்கு தனக்கு அளிக்கப்பட்டுள்ள தெய்வீக உரிமையாம். ராமர் கோவில், தேசம் மற்றும் அரசு ஆகிய  அனைத்தும் ஒன்றாக உருமாற்றம் செய்யப் பட்டுள்ளன. ராமர் கோவில்தான் தேச ஒற்றுமை மற்றும் தேசிய உணர்வின் அடையாளம் என்று  பிரதமர் மோடி அடிக்கடி கூறி வருகிறார். இது  இந்துத்துவா தேசியவாதத்தின் ஒரு வலியுறுத்த லாகும்.

மார்க்சிஸ்ட் கட்சியின்  தெளிவான நிலைப்பாடு
அயோத்தியில் ஜனவரி 22 விழாவிற்கான அழைப்பிதழை நிராகரித்த முதல் தேசியக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியேயாகும். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, “ஒரு மதக் கொண்டாட்டத்தினை, பிரதமர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் மற்றும் இதர  அரசு அதிகாரிகள் நேரடியாகவே சம்பந்தப் பட்டு அதனை ஓர் அரசு நிகழ்ச்சியாக ஆர்எஸ் எஸ்/பாஜக மாற்றியிருப்பது மிகவும் துர திர்ஷ்டவசமாகும்.

உச்சநீதிமன்றம் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளது போன்று,  இந்தியா வில் ஆட்சி அதிகாரத்தின் அடிப்படைக் கொள்கை, இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள அரசு, எவ்வித மான மதத்தையும் சார்ந்து இருக்கக் கூடாது. இது ஆளும் தரப்பினரால் இந்த நிகழ்வில் மீறப் பட்டுக் கொண்டிருக்கிறது”  என்று கூறியிருந்தது.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தத் தெளிவான நிலைப்பாடு, இந்த நிகழ்வு தொடர்பாக மதச்சார்பற்ற கட்சிகளின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரண மாக, பெரிய அளவில் இயங்கும் மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்கள் எவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.  இந்தக்  கட்சிகள் அனைத்தும் வரவேற்பு அழைப்பித ழை நிராகரித்திருப்பது ஓர் அரசியல் நிகழ்வாக மாறியிருக்கிறது.

ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்களும், அதன் அடிவருடிகளாக செயல்படும் கார்ப்ப ரேட் ஊடகங்களும் எதிர்க்கட்சிகளை ‘இந்து  எதிர்ப்பாளர்கள்’ என்று முத்திரை குத்த என்ன தான் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. பாஜக, மக்களின் மத நம்பிக்கையை தங்களுடைய குறு கிய அரசியல் ஆதாயத்திற்காக எப்படி எல்லாம் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது என்பதை மிகச் சரியாகவே மக்கள் உணர்ந்துள்ளனர்.

சங்கராச்சாரியார்களின் குற்றச்சாட்டுகள்
இவர்கள் எதிர்க்கட்சிகள் வீசும் இந்து எதிர்ப்பு குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எடு படாமல் போனதற்கு மிகவும் முக்கியமான கார ணம், இந்து மதத்தைச் சேர்ந்த பிரதான நான்கு  சங்கராச்சாரியார்களும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்பதுமாகும்.

பூரி கோவர்தன பீடம், ஜோதிர் மடம், துவாரகா சாரதா பீடம், சிருங்கேரி சாரதா பீடம் (The main Hindu Peeths –  Puri Govardhana Peeth, Jyotir Math, Dwarka Sharda Peeth, Sringeri Sharda Peeth) ஆகிய நான்கு சங்கராச்சாரி யார்களும் ஜனவரி 22 அன்று அயோத்தி விழா வில் பங்கேற்கவில்லை என்று அறிவித்திருந் தார்கள். பூரி சங்கராச்சாரியாரும், ஜோதிர் மடமும் இந்து மத சாஸ்திரங்களைப் புறக்கணித்துவிட்டு, கும்பாபிஷேகம் நடைபெறுவதாகக் கூறியும், இன்னும் கோவில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை என்று கூறியும், தங்கள் மறுப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் மத விழாவில் பிரதமருக்கு என்ன வேலை என்றும் பூரி சங்கராச்சாரியார் மிகவும்  வெளிப்படையாகக் கேட்டிருக்கிறார்.

‘இந்துயிசத்திற்கே’ எதிரானவர்கள் ஆர்எஸ்எஸ் - பாஜக
சங்கராச்சாரியார்கள் வெளிப்படுத்தியுள்ள காரணங்கள் மிகவும் ஆழமானவைகளாகும். ஆர்எஸ்எஸ்-சும், விசுவ இந்து பரிஷத் போன்ற அதன் பல்வேறு துணை அமைப்புகளும் ‘இந்து யிசத்தை, தங்களுடைய மையப்படுத்தப்பட்ட மதமாக மாற்றியமைப்பதற்கு, பேராசிரியர் ரொமிலா தாப்பர் கூறியது போன்று ஒரு “சிண்டிகேட் இந்துயிசமாக” (“syndicated Hinduism”) மாற்றியமைப்பதற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவர்களின் செயல்பாடு கள் அனைத்தும் இந்துயிசத்தின் அடிப்படை யான இயற்கைத் தன்மைக்கே எதிரானவை களாகும். இந்து மதத்திலும் பல்வேறு நம்பிக்கை கள், நடைமுறைகள் மற்றும் தெய்வங்கள் உண்டு. இவை அனைத்திற்கும் எதிராக இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்துத்துவாவின் அரசியல் திட்டம் என்பது பல்வேறு பன்முக தெய்வங்கள் கொண்ட இந்துயிசத்திற்கு எதிரானதாகும். இந்தியாவில் புதிய இந்துத்துவா அரசின் மாளிகை இந்தியாவில் உள்ள பெரும் வர்த்தக நிறுவனங்களின் முழு ஆதரவுடன் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி, கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி போன்ற பெரும் வர்த்தகப் பெரும் புள்ளிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.  

பிரச்சனை இத்துடன் முடியாது...
இவ்வாறு அரசே ராமர் கோவிலைக் கட்டு வதன் காரணமாக, வெகுநாட்களாக இருந்து வரும் பாபர் மசூதி - ராம ஜென்மபூமி சர்ச்சை முடிவுக்கு வந்துவிடும் என்று நல்லெண்ணம் கொண்ட மதச்சார்பற்றாளர்கள் சிலர் கருதுகிறார்கள். இவர்கள் தவறு செய்கிறார்கள்.  பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி சர்ச்சையை அடுத்து இப்போது இந்துத்துவாவாதிகள் காசி மற்றும் மதுரா மசூதி சர்ச்சைகளைத்  தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

1991ஆம் ஆண்டு வழிபடும் இடங்கள் சட்டத்தின்படி முடிந்துபோன விஷயங்களை, நீதித்துறையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டும், தொல்பொருள் ஆய்வுகளின் தந்திரத்துடனும்,  மீண்டும் இப்பிரச்சனைகளைத் தொடங்கியிருக் கிறார்கள். இந்தியக் குடியரசை, இந்துத்துவா குடியர சாக மாற்றவேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ் /இந்துத்துவாவாதிகள் மேற்கொண்டுவரும் சூழ்ச்சித் திட்டங்கள் இன்னமும் போதுமான அளவிற்கு பலராலும் உணரப்படவில்லை.

அர சியல் ஆதாயத்திற்காக ஒன்றிய பாஜக ஆட்சி யாளர்கள் மதத்தையும் அரசையும் இணைத்து நடத்திவரும் திட்டத்தை, மேலும் மதச்சார்பற்ற குடியரசு உறுதியுடன் பாதுகாக்கப்படும் விதத்தில் உறுதியுடன் எதிர்க்கப்பட வேண்டும்.

ஜனவரி 17, 2023
- தமிழில்: ச.வீரமணி