india

img

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு!

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் கடந்த ஆண்டு கைதான 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கத்தாரில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேர், இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் கைதுசெய்யப்பட்டு தனிச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர். தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் (Dahra Global Technologies and Consultancy Services) என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சௌரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, மாலுமி ராகேஷ் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம், இதன் முழுமையான தீர்ப்பு விவரங்கள் கிடைத்தவுடன் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளது.