தலைநகர் டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் மீது ஒன்றிய மோடி அரசின் காவல் துறை, துணை ராணுவம் தாக்குதலை கண்டித்தும், போராட்டத்தில் துப்பாக்கி சூட்டுக்கு பலியான இளம் விவசாயி சுப்கரன்சிங் (வயது.24) நியாயம் வழங்க கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு தலைமையில் விவசாயிகள் மற்றும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்புகள் இணைந்து முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வெள்ளியன்று (பிப். 23) கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எல்.சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், ஜெய்சங்கர்(விச), டி. சந்திரன், மாவட்ட செயலாளர் பி. ரகுபதி(விதொச), சங்கர் மேஸ்திரி(ஏஐடியுசி), தா. வெங்கடேசன்(லிகாய்), எ. ரமேஷ்(சிஐடியு), துரைராஜ்(பொது தொழிலாளர் சங்கம்), பாபு(ஆட்டோ), நிலவு குப்புசாமி, தாமோதரன், ரேணு, செந்தில், சேகர்(விச), சேட்டு (வேட்டைக்காரன்சங்ம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.