india

img

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு ஐடி கம்பெனிகளிலிருந்து ஊழியர்கள் வெளியேற்றம்

புதுதில்லி, ஏப்.21- கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற பெரிய அளவிலான ஐ.டி.கம்பெனிகளில், ஊழியர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் ஓர் அறிக்கையின்படி, 2023-24ஆவது நிதியாண்டில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோவில் முறையே 13,249 ஊழியர்கள், 25,994 ஊழியர்கள் மற்றும் 24,516 ஊழியர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். ‘இந்தியாவில் உள்ள இந்நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக ஊழியர்களை வெளியேற்றியதாகக் கூற வேண்டியதில்லை.

ஏனெனில் இவைகள் ஊழியர்களை வாடகைக்குத்தான் அமர்த்திக்கொள்கின்றன. அவ்வாறு வாடகைக்கு அமர்த்திக்கொள்பவர்களைத் தற்போது குறைத்துவிட்டன’ என்று பிசினஸ் லைன் நாளேடு விளக்கமளித்திருக்கிறது. சென்ற ஆண்டு அமெரிக்காவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கு வங்கி நிர்மூலமாகியதை அடுத்து இவ்வாறு ஐ.டி.நிறுவனங்கள் தாங்கள் ‘வாடகைக்கு அமர்த்தும்’  நபர்களைக் குறைத்திருப்ப தாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. (ந.நி.)