india

img

MEFTAL மாத்திரைகளின் பயன்பாட்டுக்கு எதிராக ஐபிசி எச்சரிக்கை!

மருத்துவர்கள் அறிவுறுத்தல் இன்றி மெஃப்டல் (MEFTAL) என்ற வலி நிவாரணி மாத்திரை பயன்படுத்துவதற்கு எதிராக இந்திய மருந்தியல் ஆணையம் (ஐபிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது. 
மாதவிடாய் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த மாத்திரையை உட்கொண்ட 2 முதல் 8 வாரங்களுக்குப் பின் ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் (Eosinophils) உருவாகுதல், தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்ற வாய்ப்பு உள்ளது என ஐபிசி எச்சரித்துள்ளது.