india

img

‘பற்றியெரியும் நெருப்பை அணைக்கவே போராடுகிறோம்’ முகமது சலீம் உறுதி

கொல்கத்தா, ஏப்.25- நாட்டில் பற்றியெரிந்து கொண்டி ருக்கும் நெருப்பை அணைக்கவே இடது முன்னணியும், காங்கிரசும் போராடு கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு செயலாளரும், முர்சிதாபாத் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான முகமது சலீம் கூறியுள்ளார். முர்சிதாபாத் மாவட்டத்தில் இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவதற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

முர்சிதாபாத் தொகுதியில் முகமது சலீம், பெஹராம்பூரில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் ஜாங்கிபூரில் மோர்ட்டுசா உசேன் ஆகியோர் போட்டி யிடுகிறார்கள். இந்தத் தொகுதிகளில் மே 7 அன்று வாக்குப்பதிவு நடைபெற வுள்ளது. இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டுப் பிரச்சாரத்திற்கு மக்கள் திரளாக வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். இரு கட்சிகளும் இணைந்து நிற்பது குறித்துப் பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ள நிலையில், கிராமத்தில் ஒரு வீட்டில் அல்லது சில வீடுகளில் தீப்பிடித்து விட்டால் அனைவரும் ஒரே குரலில் தண்ணீர், தண்ணீர் என்றுதானே சத்தம்  கொடுப்பார்கள்.

அப்படிச் சொல்வது  குறித்து அவர்களுக்குள் சண்டை எதுவும் வராதல்லவா..? அது போலவே தற்போது நாட்டில் நெருப்பு பிடித்துள்ளதால் அதை அணைக்க இடது முன்னணியும், காங்கிரசும் கைகோர்த்துள்ளன என்று வர்ணித்தார். மேலும் பேசிய அவர், “பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்றுதான் நாங்கள் கருதுகிறோம். ஆனால் பாஜகவுக்கு எதிராகத் திரிணாமுல் கரம் கோர்க்காது. காங்கிரசை உடைத்து திரிணாமுல் கட்சியை உருவாக்கியதில் ஆர்.எஸ். எஸ்.சின் பின்னணி உண்டு. மேற்கு  வங்க அரசியலில் நுழைய மம்தா பானர்ஜியைப் படிக்கட்டாக ஆர்எஸ்எஸ் பயன்படுத்திக் கொண்டது.

மதத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் அமைப்புகள் மம்தாவுக்கு ஆதரவாக நிற்கின்றன” என்றார். நாடாளுமன்றத்தில் சிறிய வர்த்த கர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சாதாரண மக்களின் பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள் நடக்காமல், பெரு நிறுவனங்களை மேலும் எப்படி வளர்த் தெடுக்கலாம் என்று விவாதிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய முகமது சலீம், பட்டினி அளவில் மிகவும் பின்தங்கிய நாடாக இந்தியா இருக்கிறது. சுகா தாரத்திற்கான கட்டமைப்பு சீரழிந்து கிடக்கிறது என்று குறிப்பிட்டார். அவரை ஆதரித்து காங்கிரஸ் தலை வர்களும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினர்.