புதுதில்லி, பிப். 14 - வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக தில்லியை முற்றுகையிட அணிவகுத்துள்ள விவசாயிகள் மீது கடும் அடக்குமுறையை ஏவியுள்ள ஒன்றிய மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“விவசாயிகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம்(டிரோன்கள்) கண்ணீர்புகைக் குண்டுகளை வீசி அடக்கு முறையை ஏவுவது என்ற கொடுமை நாம் இதுவரையிலும் கேட்டிராதது, கண்டிராதது தில்லியை நோக்கி அணிவகுக்கும் விவசாயி களைத் தடுப்பதற்காக ஒன்றிய ஆட்சியாளர் கள் பல்வேறு விதமான தடுப்பரண்களை அமைத்திருக்கிறார்கள். நாட்டிற்கே உண வளிக்கும் விவசாயிகளை மதிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அடக்குமுறையை கைவிட்டு உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். பிப்ரவரி 16 அன்று நாடு தழுவிய விவசாயிகள் - தொழிலாளிகள் கிளர்ச்சி நடைபெற உள்ளது. அவர்களது கோரிக்கைகளுக்கு மோடி அரசு செவிமடுக்காமல் தப்பிச் செல்ல முடியாது” என்று சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.