india

ஒரே நாடு, ஒரே தேர்தல்: செப்.23ல் கூட்டம்

புதுதில்லி, செப்.16- மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவில் ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்புச் சட்டத் திற்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  எனினும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே ரகசிய மாக பணிகளைத் துவக்கிய ராம்நாத் கோவிந்த், கடந்த செப் டம்பர் 2 அன்று வெளிப்படையாக குழுவுக்குத் தலைவராக அறிவிக்கப்பட்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கி ரஸ் மக்களவைக்குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,  மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 1 5-வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே. சிங்,  மக்களவை முன்னாள் பொதுச்செயலாளர் சுபாஷ் காஷ் யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் குழு வின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். சிறப்பு அழைப் பாளராக சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டது. இந்நிலையிலேயே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர் பான ஆய்வுக்குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 23 அன்று நடைபெறும் என அறிவித்துள்ளார்.