புதுதில்லி, பிப்.17- 2024 மக்களவைத் தேர்தலை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக தலை மைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முழுவீச் சில் தயாராகி வருகிறது. வரும் தேர்த லில் நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட உள்ளன. 1.5 கோடி தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு மக்கள வைத் தேர்தலில் 91.20 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
இந்த எண்ணிக்கை 6 சதவிகிதம் அதி கரித்து வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. அதில், நாடு முழு வதும் 2.53 கோடி புதிய வாக்காளர் கள் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ள னர். மேலும் ஆண் வாக்காளர்கள் 49.72 கோடியும், பெண் வாக்காளர்கள் 47.15 கோடியும், மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேரும், மூன்றாம் பாலினத்த வர்கள் 48,044 பேரும் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தல் நடத்த தாங்கள் தயாராக இருப் பதாக தலைமைத் தேர்தல் ஆணை யர் ராஜீவ் குமார் சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித் துள்ளார். “2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன” என்று அவர் கூறியுள்ளார்.