india

img

ஜூலை 23 ஒன்றிய பட்ஜெட் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்!

புதுதில்லி, ஜூலை 6- ஒன்றிய அரசின் 2024-25- ஆம் நிதியாண்டிற்கான பட்  ஜெட் கூட்டத் தொடர், ஜூலை  22 துவங்கும் என்று நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்  சர் கிரண் ரிஜிஜூ தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்  துள்ள அறிக்கையில், “ஒன் றிய அரசின் பரிந்துரைப்படி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்  டத்தொடரை ஜூலை 22  முதல் ஆகஸ்ட் 12 வரை நடத்துவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு  ஒப்புதல் அளித்து உள்ளார்.  2024 - 25ஆம் நிதியாண்டிற் கான ஒன்றிய பட்ஜெட் ஜூலை  23 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும்” என  கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று 3-ஆவது முறையாக பாஜக ஆட்சி யமைத்துள்ள நிலையில், நிர்  மலா சீதாராமனே மீண்டும்  நிதியமைச்சராக பொறுப் பேற்றுள்ளார். இதன்மூலம் அவர், 7-ஆவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்  கிறார்.