கொல்கத்தா, மார்ச் 25-
மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் வலுவாக எடுத்துரைக்க, இடதுசாரிகளைப் பலப்படுத்துங்கள் என்று வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழு செயலாளரும், மக்களவைத் தேர்தலில் முர்சிதாபாத் தொகுதி வேட்பாளருமான முகமது சலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நான்கு வேட்பாளர்கள்
ஏற்கனவே 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்த இடது முன்னணி மேலும் நான்கு தொகுதிகளில் போட்டியிடும் வேட் பாளர்களின் பெயர்களை அறிவித் துள்ளது, இதில் முர்சிதாபாத் தொகுதியில் முகமது சலீம், வர்த்தமான்-துர்க்காபூரில் சுக்ரிதி கோஷல், ரனாகாட்டில் அலகேஷ் தாஸ் மற்றும் போல்பூரில் சியா மளி பிரதான் ஆகியோர் களமிறங்கு கிறார்கள்.
இரவோடு இரவாக முர்சிதா பாத் சென்றடைந்த முகமது சலீம், மக்களைச் சந்திக்கத் தொடங்கி னார். ஏற்கனவே இரண்டு முறை மக் களவைக்கும், இரண்டு முறை மாநி லங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப் பட்ட முகமது சலீம், ஒரு முறை சட்ட மன்ற உறுப்பினராகி, மாநில அமைச்சராகவும் பணியாற்றி யிருக்கிறார்.
ஞாயிறன்று காலையில் பிரச்சா ரம் தொடங்கியபோது, ஏராளமா னோர் அதில் பங்கேற்றனர். கட்சி யின் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம் தொற்றியிருக்கிறது. வேட்பாளர் சலீமின் உடனடி வரவு பிரச்சாரத்தை விரைவுபடுத்தி யுள்ளது. கடந்த தேர்தலின்போதும், சட்டமன்றத் தேர்தலின்போதும் மம்தா பானர்ஜி அளித்த வாக்குறு திகளை நினைவு கூர்ந்து, அவை தற்போது வரையில் நிறைவேற்றப் படாததை அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.
மனு தாக்கலைத் தடை செய்ய முயற்சி: காவல்துறையினர் அட்டகாசம்
இடது முன்னணி வேட்பாளர் களை மனு தாக்கல் செய்ய விடா மல் தடுக்கும் முயற்சியை முறி யடித்து, மக்கள் ஆதரவுடன் மனுக் களை தாக்கல் செய்தனர்.
ஜல்பைகுரி மக்களவைத் தேர்தலில் இடது முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் தேவ்ராஜ் பர்மன் களமிறங்கியுள்ளார். பிரச்சாரம் தொடங்கியது முதல் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் அரண்டு போன திரிணாமுல் மற்றும் பாஜக வினர், அவரது பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் கள்.
அவரது மனுதாக்கலையும் தடுக்கவும் முயற்சித்துள்ளனர். தேவ்ராஜ் பர்மன் மனு தாக்கல் செய்யக் கிளம்புகை யில், அவருடன் ஏராளமான பொது மக்களும் தயாராகினர். கிட்டத்தட்ட ஒரு ஊர்வலம் போன்று அந்தக் கட்சி அமைந்தது. இவ்வளவு ஆத ரவா என்று எதிர்க்கட்சியினர் ஆத்தி ரப்பட்டு, மக்கள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று காவல்துறை யைத் தூண்டி விட்டார்கள்.
பாஜக வினரும் இதற்கு உடந்தையாக இருந்தனர். பெருகிய கூட்டத்தின் முன்வரிசையில் நின்றவர்கள் அனைவரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். வேட்பாளருடன் வந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத் துச் சென்றனர். மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி யும் காவல்துறையினர் செவி சாய்க்கவில்லை. இதைக் கேள்விப் பட்டவுடன் ஏராளமான மக்கள் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டனர். வேறு வழியின்றி, இடது முன்னணி ஆதரவாளர்கள் விடு விக்கப்பட்டனர்.
முர்ஷிதாபாத்தில் முகம்மது சலீம் போட்டி
மேற்குவங்கத்தில் மக்களவைத் தேர்தலில் ஏற்கனவே 16 வேட்பா ளர்களை அறிவித்துள்ளனர். மேலும் நான்கு வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மாநிலச் செயலா ளர் முகம்மது சலீம் முர்ஷிதாபாத்தில் போட்டியிடுகிறார்.
டாக்டர் சுக்ரிதி கோஷ் பர்தமான் – துர்காபூர் தொகுதியிலும் அலோக் தாஸ் - ரனாகாட் தொகுதியிலும் ஷியாமலி பிரதான் - போல்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள 42 தொகுதிகளில் இடது முன்னணி 21 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்தது. மீதமுள்ள இடங்களில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற கட்சி கள் போட்டியிடுகின்றன.
8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் சனிக்கிழமை அறிவித்தது. கடந்த முறை வெற்றி பெற்ற பெஹ்ராம்பூர் மற்றும் தெற்கு மால்டா தவிர, வடக்கு மால்டா , ராய்க், ஜங்கிபூர், புருலியா, கொல்கத்தா வடக்கு மற்றும் பிர்பும் ஆகிய தொகுதிகளிலும் காங்கி ரஸ் போட்டியிடுகிறது. மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 6ஆவது முறையாக பெஹ்ராம்பூர் தொகுதியில் போட்டி யிடுகிறார்.