india

img

பொருளாதாரம் மேம்பட உடனடி வாய்ப்பு இல்லை... ‘கிரிசில்’ நிறுவன ஆய்வில் தகவல்

புதுதில்லி:
2020-21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளால் நாட்டின் பொருளாதாரம் உடனடியாக மேம்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று  ‘கிரிசில்’ (Crisil) நிறுவனம் கூறியுள்ளது.2019 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலேஇந்தியப் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குறைவான உள்நாட்டு உற்பத்தி, வேலையின்மை, நிதி நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்சனைகளோடு, பொருளாதார மந்த நிலையும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019-20 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவிகிதமாகக் குறைந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி, அதற்கடுத்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இன்னும் மோசமாக 4.5 சதவிகிதமாகக் குறைந்தது. இந்த வளர்ச்சியும், 2020-21 நிதியாண்டில் இருக்குமா? என்பதில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளன.இந்நிலையில், 2020-21 நிதி யாண்டிற்கான பட்ஜெட்டில், உள்கட்டு மானத் துறையில் அதிக முதலீடு, 100 புதிய விமான நிலையங்கள், புதிதாக அதிவேக ரயில்கள், வேளாண்துறைக்கு சிறப்புத் திட்டங்கள், நெடுஞ்சாலைத் திட்டங்கள் விரிவாக்கம் போன்ற அறி விப்புக்கள் வெளியான நிலையில், இது பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி, வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று ஒரு பிரச்சாரம் மத்திய பாஜக தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த பட்ஜெட் அறிவிப்பு களால், இந்திய பொருளாதாரம் உடனடி யாக மேம்படுவதற்கு வாய்ப்பில்லை என்று ‘கிரிசில்’ நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.உள்நாட்டில் நுகர்வும் தனியார் முதலீடுகளும் குறைந்ததால் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாக கிரிசில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.2018-19 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவிகிதமாக இருந்த நிலையில், 2019-20ஆம் ஆண்டில் 5.7 முதல் 6.6 சதவிகிதம் வரையில் இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது.அரசின் வரி வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ள சூழலில், உள்கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் அதிகளவில் செலவிட்டால் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தஆண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 3.8 சதவிகிதத்துக்குள் வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்றஆண்டில் இதன் இலக்கு 3.3 சதவிகிதமாக மட்டுமே இருந்தது என்பதையும் ‘கிரிசில்’ சுட்டிக்காட்டியுள்ளது.

;