‘வாக்கு ஜிகாத்’: மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு
இந்தூர், மே 7- நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி பயத் தில் பிரதமர் மோடி தொடர்ந்து சர்ச்சைக் குரிய வகையில் பேசி வருகிறார். இதன் மீது தேர்தல் ஆணையம் உரிய நட வடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்க்கிறது என்று எதிர்க்கட்சியினர் கண்டித்துள்ளனர்.
ஏற்கனவே ராஜஸ்தானில் முஸ்லிம் கள் குறித்து வெறுப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் பேசினார்.
தற்போது மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோனில் மே 7 அன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் மோடி இந்தத் தேர்தலில் வெற்றி பெறப்போவது வாக்கு ஜிகாத்தா அல்லது ராம ராஜ்ஜியமா என் பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண் டும்” என்று கூறினார்.
மேற்குவங்க ஆசிரியர்கள் நியமனம்
சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி, மே 7- மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியம னத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
மேற்குவங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாநில பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. 25 ஆயிரத்து 753 பேருக்கு ஆசிரியர் பணிக்கான நியமன ஆணையை மாநில அரசு வழங்கியது.
பலர் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலை பெற்றதாக தொடுக்கப்பட்ட வழக் கில், கொல்கத்தா உயர்நீதிமன்றம், பணி நியமனத்தை ரத்து செய்தது. இதனை எதிர்தது உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு மே 7 அன்று இந்த வழக்கை விசா ரித்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, “மேற்குவங்க அரசு எதற்காக இத்தனை அதிகமான எண்ணிக்கையில் பணியிடங் களை உருவாக்கி, வெயிட்டிங் லிஸ்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை பணியமர்த்தியது. தேர்வு முறையையே எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் இருந்தபோது இது தேவையா?” என கேள்வி எழுப்பியது.
அதற்கு தலைமை நீதிபதி, “ அரசுப் பணிகள் இன்றைய காலத்தில் குறைந்து விட்டன. அரசு வேலை என்பது ஒரு நபர் தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் அடையாளமாக இருக்கிறது. நியாயமான பணி நியமனங்களிலும் ஊழல் என்றால் என்னாவது? மக்களுக்கு நம் பிக்கை போய்விடாதா? இதை எப்படி நீங்கள் எதிர்கொள்ளப் போகிறீர்கள்?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி னார்.
ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஆசி ரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசா ரிக்க உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட ஆசிரி யர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது.
புதுதில்லி
கோவிஷீல்டு குறித்து
விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரிட்ட னைச் சேர்ந்த ஆஸ்ட்ரா ஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்க லைக்கழகம் இணைந்து கொரோனா பாதிப்புக்கு தடுப்பூசியை கண்டு பிடித்தன.
இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கொரோனாவுக்கான தடுப்பூசியாக கோவிஷீல்டு என்ற பெயரில் விற்பனை செய்தது. இந்தியாவில் கோடிக்கணக்கா னோருக்கு அந்த தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது.
இந்தநிலையில், கோவிஷீல்டு தடுப்பூ சியை செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக பிரிட்டன் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 100 மில்லியன் வரை இழப்பீடு கோரப்பட்ட 50 வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
அண்மையில் இது தொடர்பான வழக் கில் பதிலளித்த ஆஸ்ட்ராஜெனிகா நிறு வனம், கோவிஷீல்டு தடுப்பூசி மிக அரி தான சந்தர்ப்பங்களில் பக்க விளைவு களை ஏற்படுத்தும் என ஒப்புக் கொண்டது. இது, அந்த தடுப்பூசியை செலுத்திக்கொண் டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப் பூசி தொடர்பான பக்கவிளைவுகள் குறித்த விசாரணையை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந் தன. இதனை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
கோவிஷீல்டு பக்க விளைவு மனு தொடர்பான விசாரணையை முன்கூட் டியே தொடங்க வேண்டும் என்ற கோரிக் கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட் டது. இருப்பினும், இந்த பிரச்சனையின் தீவிரத்தை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒப்புக் கொண்டார். ஆனால், விசாரணை எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்படவில்லை.
கோவிஷீல்ட் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து விசாரிக்க நிபு ணர் குழுவை அமைக்க வேண்டும். அதனை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். கோவி ஷீல்டு தடுப்பூசியை செலுத்தியதால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அர சாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
லக்னோ
சமாஜ்வாதி, காங்கிரசுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி பிரச்சாரம்
மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிர தேசத்தில் இந்தியா கூட்டணி சார் பில் போட்டியிடும் சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட் பாளர்களை ஆதரித்து, ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய்சிங் தலைமையில் முக்கியத் தலை வர்கள் சிலர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.