india

img

மோடி பிராண்ட் ஆட்சியில் மருந்துத் தொழிலாளர் அவலம்!

சுதந்திர இந்தியாவில் சோசலிச நாடுகளின் ஆதரவோடு பொதுத்  துறை மருந்து நிறுவனங்கள் உரு வாக்கப்பட்டன. தனியார் மயக் கொள்கைகள் அமலான பிறகு அவை கொஞ்சம் கொஞ்சமாக செய லிழக்க வைக்கப்பட்டன. மோடி அரசு அதில் தீவிரம் காட்டியது.

 இந்தியாவின் மருந்துத் துறையில் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய பிரிவுகளில் சுமார் 5 லட்சம் பேர் பணி யாற்றுகின்றனர். விற்பனை பிரிவில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேல்  மருந்து விற்பனை பிரதிநிதிகள் பணிபுரிகின்ற னர். இவர்களின் நிலைமை மிகத் துயர் தோய்ந்தது ஆகும். காரணம், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் தனியாரிடம் இருப்பது.  மருத்துவர்கள் குறிப்பிட்ட நோய்க்கு ஒரே பிராண்ட் மருந்தையே திரும்பத் திரும்ப எழுத மாட்டார்கள். 4, 5 பிராண்ட்களை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி எழுதுவர்.

ஏனெனில் குறிப்பிட்ட நோய்க்கு ஒரே  மருந்தையே திரும்பத் திரும்ப எழுதி னால் அந்த பரிந்துரைச் சீட்டை வைத்துக் கொண்டு நோயாளி மருந்துக் கடையில் காட்டி அதனைப் பெற்றுக் கொள்வர். எனவே மருத்துவர் வாடிக் கையாளர்களை இழக்க வேண்டி வரும். ஆனால் தனியார் மருந்து நிறு வனங்கள் தங்கள் நிறுவன மருந்துகள் மட்டுமே விற்க வேண்டும் என நினைப் பர். ஒவ்வொரு நிறுவனமும் அவ்வாறு தான் நினைக்கும்.  கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு மருந்து விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வீழ்ச்சிக்கான உண்மையான காரண காரியங்களை  ஆய்ந்து பார்க்காமல், மருந்து விற் பனை பிரதிகளுக்கு புதிய புதிய வேலை விதிகளை தனியார் நிறு வனங்கள் அமலாக்கியுள்ளன. மாதாந்திர விற்பனை இலக்கை எட்ட  முடியாத மருந்து விற்பனை பிரதிநிதி களை மருந்து நிறுவனங்கள் தொலை தூரமான இடங்களுக்கு பணி மாற்றம் செய்கின்றன. பணியை விட்டு நீக்கி  பழிவாங்கும் நடவடிக்கைகள் சாதா ரணமாகி வருகின்றன.

பல பன்னாட்டு மருந்து நிறுவனங்களில் கட்டாய விருப்ப ஓய்வு, தேவைக்கதிகமாக உள்ளவர்கள் என்று பல மருந்து விற்பனை பிரதிநிதிகளை வேலையை விட்டு நீக்குவதோடு, தங்களுக்கு அதிக லாபம் தராத மருந்துகளை விற்பனை செய்வதில்லை என பலரை பணி நீக்கம் செய்துள்ளனர்.  இந்நிலையில் சிறுபான்மை மதத்த வர்களின் நிலை என்னவென்பதற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிடலாம்.  ஆண்டனி என்ற இளைஞர் எம்எஸ்சி முடித்து சேலம் மாவட்டம், ஆத்தூரில் ஒரு கம்பெனியில் கடந்த 2010இல் தற்காலிக பணியாளராகச் சேர்ந்தார். 3மாதங்களாக அவரது வேலையைப் பார்த்து மகிழ்ந்த மற்றொரு நிறுவனம் (ஸ்டெட்மேன்) தானாக முன்வந்து அழைத்தது.

ஆண்டனியின் அர்ப்பணிப்புமிக்க பணியின் காரணமாக அடுத்த 6  மாதங்களில் மேலும் பல நிறு வனங்கள் அழைப்பு விடுத்தன. 15 மாதங்களுக்குப் பிறகு ஒரு பிரபல பார்மசி நிறுவனத்தில் 2012ஆம் ஆண்டு ஜனவரியில் சேர்ந்தார். ப்ராப் பரான பேட்டன், டை, சூ உள்ளிட்ட வற்றோடு வேலைக்குச் செல்வார். இத்துறையில் மேலாளர்கள், மண்டல மேலாளர்களும் அவ்வப்போது உடன்  வருவர். அதுபோன்ற சமயங்களில் ஆண்டனியின் நேர்த்தியான பணி யைப் புகழ்ந்து பாராட்டத் தவறிய தில்லை.

 இந்நிலையில், தேசிய மேலாளர், பொது மேலாளர்கள் மாறும்போது வழக்கமான பணி கலாச்சாரமும், அணுகுமுறையும் மாறியது. தமிழ் மாநில உயர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் இவருக்கு மேலதிகாரியாக  வந்தார். இதற்கு முன்பிருந்த மேலா ளர்கள் பாராட்டியுள்ள நிலையில், இவ ரால் ஆண்டனியைப் பாராட்ட இயல வில்லை. மாறாக எதிர்மறையான குரோ தம் தலைதூக்கியது. அக்குரோதம் வெளிப்பட்ட போது ஆண்டனியால் அந்த வலியைத் தாங்க முடிய வில்லை. பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்னும் பாரதி யின் வரிகளைப் போல, ஆர்எஸ்எஸ் காரர்களின் ஆட்சியில் ஊக்கம் பெற்ற ஒரு அதிகாரி தனக்குக்கீழே வேலை பார்க்கும் அப்பாவி ஊழியரை இழிவு படுத்தினார்.

டை கட்டிக் கொண்டு வேலை செய்கிறீர்கள், ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள், இது தவறு என்று, சல்லிக் காசு பொறாத காரணங்களைக் கூறி னார். அடுத்த சில ஆண்டுகளில் கொரோனா வந்தது. அதுபல பாடங் களை பலருக்கும் கற்றுக் கொடுத்தது.  ஆண்டனி மருந்துப் பையை விட்டெ றிந்தார். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு டன் தராசை தூக்கிக் கொண்டு பழைய இரும்பு வியாபாரத்திற்குச் சென்றார். சொற்ப வருமானமே கிடைத்தாலும் குடும்பத்தோடு நிம்மதியான வாழ்க்கை நடத்துவதாகக் கூறினார். கடந்த 10 ஆண்டு கால மோடி  பிராண்ட் ஆட்சியின் நிலை இதுதான்.  சக மனிதர்களை அவர்கள் சம மாகக் கருதியதேயில்லை. மருந்துத் துறையில் பணியாற்றும் தொழி லாளர்களும் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமில்லா மல், அவர்கள் வகுத்த மதம், சாதி என்ற பிரிவினைக் கோட்பாடுகளைக் கடந்து ஒன்றுபட்டு கசப்பு மருந்தை அவர்களுக்குக் கொடுக்கும் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.