சென்னை, பிப்.12- கிறிஸ்தவர்களுக்கான கல்லறை மற்றும் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தானங்களுக்கு நிலம் வழங்கவும், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தரச் சான்றிதழ் வழங்கவும் முன்வந்து அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் வசிக்கும் கிறிஸ் தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் இறந்தவர் களின் உடலை நல்லடக்கம் செய்வ தற்குப் போதுமான இடங்கள் இல்லாமல் கடுமையான சிரமத் திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கிறிஸ்தவர்களுக்கான கல்லறைகளுக்கும், முஸ்லிம் களுக்கான கபர்ஸ்தானங்களுக் கும் அரசு இடம் வழங்கி உதவ வேண்டும் என்ற கோரிக்கை அந்த சமூக மக்களால் நீண்ட காலமாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 9 அன்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டங்கள், இஸ்லா மியர்களுக்கான கபர்ஸ்தான் இல் லாத மாவட்ட தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாந கராட்சி, நகராட்சி சார்பில் கல்ல றைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாடு முதலமைச்சரால் வெளி யிடப்பட்டது. அதனை செயல் படுத்தும் விதமாக 30.01.2024-இல் அரசாணையும் வெளியிடப்பட்டுள் ளது.
சிறுபான்மையினர் நலன் சார்ந்து இத்தகைய முக்கியமான முடிவெடுத்து, அரசாணை வெளி யிட்ட முதலமைச்சருக்கும், அர சுக்கும் நன்றி தெரிவித்துக் கொள் வதோடு, இந்த திட்டத்தை மாவட் டத் தலைநகரத்தோடு நிறுத்தி விடாமல் தேவைப்படும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தவும், அத்தகைய கோரிக்கைகள் வரும் போது குறிப்பிட்ட காலத்திற்குள் அதற்கான நிலத்தை கண்டறிந்து, கல்லறை தோட்டம் அல்லது கபர்ஸ் தான் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு மதச் சார்பு சிறுபான்மையினர் அந்தஸ் தைக் காலம் குறிப்பிடாமல் நிரந்தர மாக வழங்கவும் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது சிறு பான்மை கல்வி நிறுவனங்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், சிறுபான்மை மாணவர்களின் கல்வி வாய்ப்புக்கும் சாதகமான முடிவா கும்.
சிறுபான்மையினர் நலன் காக்க இத்தகைய நல்ல முடிவுகளை அறி வித்து அமலாக்கி உள்ளதற்கும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தனது மனமார்ந்த நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.