குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லியில் மெட்ரோ ரயில் அதிகாலை 4 மணி முதல் சேவையைத் தொடங்க உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதனால், மம்தா விற்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துப் பேருந்து லாரி மற்றும் காரின் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு செல் வதை தற்காலிகமாக தவிர்க்க ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி யதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஞானவாபி மசூதி வளாகத்தில் செய்யப்பட்ட தொல்லியல் ஆய்வறிக்கையை இரு தரப்பினருக்கும் வழங்க வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டது.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா விமான சேவை நிறு வனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான டிஜிசிஏ.
ரேஷன் விநியோக வழக்கு தொடர்பாக தலை மறைவாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக் வீட்டில் அமலாக்கத் துறை புதனன்று காலை மீண்டும் சோதனையை மேற்கொண்டது.
சர்வதேச மாணவர்களுக்கான விசா வழங்கு தலை குறைப்பதாக கனடா அரசு திடீரென அறிவித்துள்ளது. இந்திய மாணவர்களுக்கு இத னால் பாதிப்பு ஏற்படுமா என்கிற அச்சம் நிலவி வருகிறது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் வேன், கார் மோதிக்கொண்ட விபத்தில் 2 வயது குழந்தை உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வயதான தாயை பராமரிக்காத மகன் மற்றும் மகளை வங்கி மற்றும் பஞ்சாயத்து பணியில் இருந்து நீக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
ரயில்வே பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்டவற்றுக்காக ரூ.60 கோடி லஞ்சம் வாங்கியதாக ரயில்வே அதிகாரிகள் 7 பேர் (அசாம், மணிப்பூர்) மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
லக்னோ
நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர் தற்கொலை: கோட்டா நகரில் தொடரும் துயரம்
நாட்டிலேயே அதிக பயிற்சி மையங்கள் கொண்ட இடமான பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் தற்கொலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோட்டாவில் ஆண்டுக்கு சராசரியாக 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து வரும் நிலையில், கடந்தாண்டு அதிகபட்சமாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 30 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில், செவ்வாயன்று இரவு கோட்டாவில் நீட் தேர்வுக்கு படித்து வந்த உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த முகமது சையத் என்ற மாணவர் ஜவஹர் நகர் என்ற பகுதியில் உள்ள தனது தங்கும் விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை
சரத் பவாரின் பேரனையும் விட்டுவைக்காத அமலாக்கத்துறை
மக்களவை தேர்தல் நெருங்கி யுள்ள நிலையில், “இந்தியா” கூட் டணியில் அங்கம் வகிக்கும் கட்சி களை மிரட்டும் நோக்கில் அமலாக்கத் துறை, சிபிஐ, வருமானவரித்துறை உள் ளிட்ட மத்திய அமைப்புகளை மோடி அரசு ஏவி வருகிறது. இந்நிலையில், சர்க்கரை ஆலை பண மோசடி தொடர்பாக தேசிய வாத காங்கிரஸ் தலைவரும், மகா ராஷ்டிரா முன்னாள் முதல்வருமான சரத் பவாரின் குடும்பத்தை குறிவைத்துள்ளது அமலாக்கத்துறை.
இந்த வழக்கு தொடர்பாக பவாரின் பேரனான ரோஹித் பவாருக்கு சொந்த மான இடங்களில் அமலாக்கத்துறை ஜன வரி மாதம் 5-ஆம் தேதி சோதனை நடத்திய நிலையில், நேரில் ஆஜராகுமாறு தொடர் சம்மனை அனுப்பி வந்தது. இந்நிலை யில், புதனன்று ரோஹித் பவார் மும்பை யில் உள்ள அமலாக்கத்துறை அலுவல கத்தில் ஆஜரானார். ரோஹித் பவார் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.