மேற்கு வங்க மாநிலத்தின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான ஆர்.ஜி.கர் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனை கொல்கத்தாவில் உள்ளது. இந்த மருத் துவமனையில் கடந்த வாரம் வியாழனன்று இரவு பணியிலிருந்த முதுகலை 2ஆம் ஆண்டு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த விவ காரம் தொடர்பாக உண்மையான குற்ற வாளி இன்னும்கைது செய்யப்படாத நிலையில், மருத்துவ மாணவி கொலை க்கு நீதிகேட்டு நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீதிமன்ற கண்காணிப் பில் விசாரணை நடத்தக் கோரி உயிரிழந்த மருத்துவ மாணவியின் பெற்றோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். செவ்வாயன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை சிபிஐ விசார ணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தடயவியல், மருத்துவ நிபு ணர்களுடன் தில்லியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் குழு புதனன்று காலை கொல் கத்தா வந்தது. தொடர்ந்து புதனன்று மதியம் மருத்துவ மாணவி வன்கொலை தொடர்பான விசாரணையை தொடங்கியது.