india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் இருந்து  லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) இல்லா மல் புறப்பட்ட சரக்கு ரயில், 80 கிலோமீட்டர் தூரம்  சென்று பஞ்சாபின் தசுயாவில் உள்ள உஞ்சி பஸ்ஸி  அருகே நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை பகுதி யின் சிவசேனா (ஷிண்டே) தலைவர் மற்றும்  மகன் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக 28  வயதுமிக்க பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இருவரும் தன்னையும், தனது  தாயையும் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம்  செய்ததாகக் கூறி ஞாயிறன்று போலீசாரிடம் புகார்  தெரிவித்துள்ளார். பாஜக ஆதரவில் சிவசேனா (ஷிண்டே) தலைவர் முதல்வராக இருப்பதால் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைவர்கள் மற்றும் அவரது மகன்களின் பெயர்களை போலீசார் வெளி யிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர் கொள்ள உள்ள நிலையில், 3 நாட்களுக்கு முன்  இருகட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றதாக ஜேடிஎஸ் 5 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டது. ஆனால் ஞாயிறன்று ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு  பின்னர் தொகுதிகள் பங்கீடு குறித்து அறிவிப்பு கள் வெளியிடப்படும் என்று மீண்டும் குழப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்  டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஞாயி றன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரி ழந்தனர்.

பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் கூறு வது போல இந்தியாவில் 370 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவது கடினம் என தேர்தல் வியூக  அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இடங்க ளுக்கு விரைவு ரயில் டிக்கெட் வைத்தி ருப்பவர்கள் அந்த நிலையங்கள் வரை மின்சார  ரயிலில், அதே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்  என்பதை தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் தீவிர மாக பரவி வருவதால், எல்லைகளில் அண்டை மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளன.

இடாநகர்
கூட்டணிக் கட்சியை வேரோடு அழித்த பாஜக

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்  றான அருணாச்சலப் பிரதேசத் தில் பாஜக - தேசிய மக்கள் கட்சி  (என்பிபி) கூட்டணி ஆட்சி நடைபெற்று  வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி  யுள்ள நிலையில் “இந்தியா” கூட்டணி யின் வேகமான வளர்ச்சியால் தோல்வி பயத்தில் உள்ள பாஜக, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்களை விலைக்கு வாங்கும் வேலையில் தீவிரமாக கள மிறங்கியுள்ளது. 

இந்நிலையில், அருணாச்சலப் பிர தேசத்தில் தங்களது கூட்டணிக் கட்சியான  என்பிபியின் 2 எம்எல்ஏக்களையும், காங்கி ரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்களை யும் தங்கள் பக்கம் இழுத்துள்ளது பாஜக.  என்பிபி கட்சிக்கு மொத்தம் 2 எம்எல்ஏக்  களே உள்ள நிலையில், கூட்டணி கட்சி  என்று கூட பாராமல் 2 எம்எல்ஏக்களை யும், சில முக்கிய தலைவர்களையும் விலைக்கு வாங்கி என்பிபி கட்சியை வேரோடு அழித்துள்ளது. 

இதன்மூலம் அருணாச்சலப் பிர தேசத்தில் காங்கிரஸ் மற்றும் என்பிபி  எம்எல்ஏக்கள் இல்லாத கட்சிகளாகிவிட் டன. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி யதன் மூலம் 60 இடங்களைக் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவின் பலம் 56 ஆக உயர்ந்துள்ளது. 

வனேஸ்வரம்
ஒடிசாவில் வன்முறை-பதற்றத்தை ஏற்படுத்தும் ஏபிவிபி

பிஜு ஜனதாதளம் ஆளும் ஒடிஷா  மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு  ஆண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஆங்கில தேர்வுக் கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த தாக ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான  ஏபிவிபி குற்றம் சாட்டியது. வினாத் தாள் கசியவில்லை என்றும், வினாத்தாள்  கசிந்தது என்று கூறும் ஏபிவிபி இதற்கான ஆதாரங்களை வெளியிட்டால் தகுந்த  நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக  சனியன்று ஒடிஷா அரசு விளக்கம் அளித்  தது. ஆனால் ஏபிவிபி குண்டர்கள் வினாத்  தாள் கசிந்ததை அரசு மறைக்கிறது எனக்  கூறி, ஞாயிறன்று கல்வித்துறை அமைச்  சர் சுதம் மார்ண்டிக்கு எதிராக கூச்சல்  எழுப்பி, அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைய முயன்று போலீ சாருடன் கைகலப்பில் ஈடுபட்டனர். இத னால் பொறுமையிழந்த போலீசார் தடி யடி நடத்தி, ஏபிவிபி குண்டர்களை கைது  செய்தனர்.