india

தீவிர மதவெறிப்பாதையில் மோடி அரசு செல்கிறது!

புதுதில்லி இந்து - முஸ்லிம் மதத்தவரிடை யே திருமணம் நடந்தால் அத்தம்பதியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச அரசு சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது; இது கொடூரமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் ஆகஸ்ட் 6 அன்று புதுதில்லி யில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக் கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:

பட்டியல்  சாதிக்குள் உள் பகுப்பாய்வு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு

பட்டியலின சாதிகளுக்குள் உள் பகுப்பாய்வு தொடர்பாக தெள்ளத் தெளிவான வழிகாட்டும் விதிமுறை களுடன் உச்சநீதிமன்ற ஏழு நீதிபதி களின் அமர்வாயத்தில் (6க்கு 1  என்ற விகிதத்தில்) பெரும்பான்மை நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பினை அரசியல் தலைமைக்குழு ஆத ரிக்கிறது. அதே சமயத்தில், தலித் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் ‘கிரீமி லேயர்’ (creamy layer) முறையை அறி முகப்படுத்துவதற்கு எதிராக கட்சி யின் உறுதியான எதிர்ப்பினை அரசியல் தலைமைக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது. இந்தப் பிரச்ச னையானது, தீர்ப்பில் செயல் படுத்தும் பகுதியின் ஒரு பகுதி யாக இல்லை என்ற போதிலும், ஏழு நீதிபதிகளில் நான்கு பேர் கிரீமி  லேயர் அறிமுகப்படுத்த வேண்டும் என்று தனித்தனியே கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

மூர்க்கத்தனமான  மதவெறித் தாக்குதல்கள்

மோடியும் பாஜகவும் பெரும் பான்மையைப் பெறக்கூடிய நிலையை நாட்டு மக்கள் மறுத் துள்ள நிலையில், அவர்கள் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு கூட்டணி அர சாங்கத்திற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எதார்த்த நிலை இப்படி இருந்தபோதிலும், நாட்டில் எதுவுமே மாறவில்லை என்ற எண்ணத்துடன் மோடி, தான் முன்பு ‘செயல்பட்டு வந்ததைப் போலவே’  செயல்படுவது தொடர்கிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினரைக் குறி வைத்து மிகவும் வெட்கக்கேடான முறையில் புதிய சட்டங்கள் நிறை வேற்றப்பட்டுக் கொண்டிருக்கின் றன. அதன் மூலம் மதவெறிச் செயல்கள் மூர்க்கத்தனமாகக் கூர்மைப்படுத்தப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தர்கண்ட் மாநில அரசாங்கங்கள் கன்வார் யாத்திரை செல்லும் பாதைகளில் உள்ள கடைகளின் சொந்தக்காரர்கள், பெயர்ப்பலகைகளில் தங்கள்  பெயர்களை எழுதி வைக்க வேண்டும் என்று அறிவித்திருக் கின்றன. சிறுபான்மையினரைக் குறிவைத்து, மதவெறிச் செயல்க ளைக் கூர்மைப்படுத்துவதற்காக வே இவ்வாறு அறிவிக்கப்பட்டி ருக்கிறது. நல்வாய்ப்பாக, உச்ச நீதிமன்றம், இந்த உத்தரவுகள் அமலாக்கத்திற்குத்  தடை விதித் திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநில அர சாங்கம், 2024 சட்டவிரோத மத மாற்றம் (திருத்தச்) சட்டமுன்வடிவு ஒன்றினைக் கொண்டு வந்திருக்கி றது. அது, இரு மதத்தினருக்கி டையே மணம் புரிவோருக்குத் தற்போது பத்தாண்டுகள் தண் டனை என்றிருப்பதை ஆயுள் தண் டனை என்று மாற்றியிருக்கிறது.

அசாமில் உள்ள மாநில அர சாங்கம் முஸ்லிம்களுக்கும் இந்துக் களுக்கும் இடையே நில விற்பனை யைத் தடை செய்திட பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. இதனை  அது ‘நில ஜிகாத்’ (‘land jehad’) என்று அழைக்கிறது. இத்தகைய பரிவர்த்தனைகளை முதலமைச்சரின் அனுமதி யுடன்தான் மேற்கொள்ள முடியும். அசாம் முதலமைச்சரும், உத்தரப்பிரதேசத்தில் கொண்டு வந்திருப்பதுபோல் இரு மதத்தி னருக்கிடையே திருமணம் நடை பெற்றால் மணமக்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டத்தை கொண்டுவந்திருப்பதைப்போல கொண்டுவரலாமா என்று பரிசீலித்துக்கொண்டிருக்கிறார்.

மகாராஷ்டிரா பாஜக தலைமை யிலான அரசாங்கம் மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு சட்டமுன் வடிவு (Maharashtra Special Public Security Bill) என்ற ஒன்றினை அறிமுகப்படுத்தி  இருக் கிறது.  இதன்கீழ் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பவர்களை ‘அர்பன் நக்சலிசத்தைக்’ கட்டுப்படுத்து கிறோம் என்ற பெயரில் குற்றம் புரிந்தவராகக் கருதிட முடியும். இது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (UAPA) என்கிற கொடுங்கோன்மைச் சட்டத்தைக் காட்டிலும் மோசமானதாகும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.