புதுதில்லி, டிச.16- ரப்பர் விவசாயிகளுக்கு கேரள அரசு தற்போது வழங்கும் ரூ.170 ஆதரவு விலையை உயர்த்த உதவ வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்கவில்லை என ஒன்றிய அரசு கைவிரித்துள்ளது.
மாநிலங்களவையில் சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸுக்கு ஒன்றிய இணை அமைச்சர் அன்பிரியா படேல் அளித்த பதிலில், இயற்கை ரப்பர் மற்றும் கலவை ரப்பரின் இறக்குமதி வரியை உயர்த்துவது மற்றும் இயற்கை ரப்பருக்கு குறைந்த இறக்குமதி விலை நிர்ணயம் செய்வது ஆகிய கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு சாதகமான நிலைப்பாட்டை எடுக்காது என்று தெளிவுபடுத்தினார்.
உண்மையான செலவில் குறைந்த பட்சம் 25 சதவிகிதத்தை நடவு மற்றும் மறு நடவு மானியமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஒன்றிய அரசு நிராகரித்தது.