india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் அமித்  ஷா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றக் கூட்டத்  தில் செய்தி சேகரித்த பத்திரிகையாளர் மீது பாஜக  குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரஸ் கிளப் ஆப் இந்தியா அமைப்பு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய  தேர்தல் ஆணையத்துக்கு இது தொடர்பாக புகா ரும் அனுப்பியுள்ளது.

4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், வீட்டில் சமைத்த உணவுகளை ஆர்டரின் பேரில் பெரும்  வசதியை வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் வழங்க முன்வருகிறது ஸ்விக்கி நிறுவனம்.

வாட்ஸ் ஆப்-பில் ஒருவரது புரொபைல் படத்தை மற்ற பயனர்கள் ஸ்கிரீன் ஷாட்  எடுப்பதை தடை செய்யும் பாதுகாப்பு வசதி, ஆன்ட்ராய்டு போன்களை தொடர்ந்து ஐபோன் களுக்கும் அறிமுகமாகிறது.

பாஜக திட்டமிட்டு முஸ்லிம் வாக்குகளைச் சிதைக்க முயற்சிப்பதாக, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் கச்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்  சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சலைட்டு கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத் தில் அவரது உதவியாளர் பிபவ் குமார் தன்னை  தாக்கியதாக ஆம் ஆத்மி எம்பியும், மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலி வால் குற்றம் சாட்டியுள்ளார்.

“கடந்த 2014இல் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது; இந்தியாவை ‘இந்து ராஷ்டிர மாக’ காண விரும்புகிறேன் என பாஜக வேட்பா ளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் சர்ச்சைக் குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

தில்லியை தொடர்ந்து மும்பையிலும் புழுதிப்  புயல் வீசியதால் வாகன ஓட்டிகள், பொதுமக் கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். 40 கி.மீ.  வேகத்தில் வீசிய புழுதிப் புயல் காரணமாக மும்பை  விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

புதுதில்லி
கெஜ்ரிவாலை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி

மோடி அரசின் தூண்டுதலால், மதுபானக் கொள்கை  வழக்கில் தொடர்புடைய தாகக் கூறி தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி  ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 16 அன்று கைது  செய்யப்பட்டார். 50 நாட்கள் சிறை வாசத்  திற்கு பிறகு இடைக்கால ஜாமீனில் வெளி வந்து மக்களவைத் தேர்தல் பிரச்சா ரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கெஜ்ரி வாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்ட பொதுநல மனு திங்களன்று  விசாரணைக்கு வந்தது. 

இருதரப்பு வாதங்களை கேட்ட பின்பு  உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, நீதிபதி தீபங்கர் தத்தா ஆகி யோர் அடங்கிய அமர்வு,”கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நேர்மையானது. எனினும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க  சட்டப்பூர்வ உரிமை இல்லை. தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா விரும்பினால் நடவடிக்கை எடுக்கலாம். நாங்கள் தலையிட மாட்டோம்” என கூறி  வழக்கை தள்ளுபடி செய்தது.

ராஞ்சி
ஜார்க்கண்ட்டில் மோடி படம், தாமரை சின்னத்துடன் “பூத் ஸ்லிப்”

14 மக்களவை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத் தில் 4 கட்டமாக தேர்தல் நடைபெறு கிறது. முதல்கட்டமாக சிங்பூம், குந்தி, லோகர்தாஹா, பலமு உள்ளிட்ட  4 தொகு திகளுக்கு திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சிங்பூம் மக்க ளவைத் தொகுதியில் மோடி படம், தாமரை சின்னம், பாஜக 400 தொகுதி களை கைப்பற்றும் என்ற வாசகங்களு டன் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்  கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரு கிறது. இந்நிலையில், தேர்தல் ஆணை யம் அமைதியாக இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

புதுதில்லி
ஹேமந்த் சோரன் ஜாமீன் வழக்கில் மே 17 அன்று முக்கிய உத்தரவு?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன் னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் முறைகேடாக நிலங்  களை வாங்கியதாக குற்றம் சாட்டி, முதல்வராக இருந்த பொழுதே ஜனவரி  31 அன்று அமலாக்கத்துறை கைது செய்  தது. தன்னை கைது செய்தது சட்டவிரோ தம் எனக் கோரியும், இடைக்கால ஜாமீன்  மற்றும் நிலையான ஜாமீன் வழங்கக்  கோரி ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த  பல்வேறு மனுக்கள் ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றம் மற்றும் சிறப்பு  நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலை யில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க  கோரி ஹேமந்த் சோரன் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோரின் அமர்வில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர் கபில் சிபல்,”தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அளித்தது போல, தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஹேமந்த் சோர னுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்க  வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை வருகிற மே 20 அன்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் இதற்கு வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு  தெரிவித்து, “இந்த வழக்கில் விரைவான நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும். மேலும் வழக்கை மே 20 அன்  றுக்கு ஒத்திவைக்கக் கூடாது” என் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் வருகிற மே 17 அன்றுக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என உத்தரவிட்டனர்.