ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிலிருந்து தில்லி நோக்கி வந்த இந்திய பயணி கள் விமானம் ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் உள்ள மலை மீது விழுந்து விபத்துக்குள்ளான தாகவும், விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என ஆப்கா னிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் விபத் துக்குள்ளான விமானம் இந்திய விமானம் இல்லை என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள் ளான விமானம் மொராக்கோ நாட்டில் இருந்து கிளம்பிய டிஎப் 10 ரக விமானம் என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.