பெங்களூரூ, மார்ச் 10- இஸ்ரோ வரலாற்றில் முதன் முறையாக, சந்திரயான்-4 திட்டத்துக்காக 2 ராக்கெட்டுகள் விண்ணில் பாய உள்ளது. அதிக எடையைத் தாங்கி செல்லும் எல்விஎம்-3 (LVM-3) ராக்கெட், பிஎஸ்எல்வி (PSLV) ஆகிய 2 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான்-4 திட்டம் வெற்றி பெற்றால், நிலவின் மேற்பரப்பில் இருந்து மண், பாறைகளின் மாதிரிகளைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வரும் திறன் கொண்ட 4-ஆவது நாடாக இந்தியா மாறும்.