கடந்த 2022இல் உலக நாடு களை தனது உள்ளங்கை யில் வைத்து மிரட்டிய கொரோனா வைரஸ் நோய்க்கு தற்காப்பு தடுப்பு மருந்தாக உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசி கள் கண்டுபிடிக்கப்பட்டு தீவிர ஆய்வுக்கு பின்னர் மக்களுக்கு செலுத்தப்பட்டன. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் கின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் ஒன்றிய அரசு அனுமதி அளித்த நிலையில், நாடு முழுவதும் பொது மக்களுக்கு மூன்று டோஸ்கள் கோவிஷீல்ட் அல்லது கோ வாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப் பட்டது.
இந்நிலையில், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ஏராள மான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பிரிட்டன் மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவன மான ஆஸ்ட்ராஜெனிகா மீது இங்கிலாந்து நாட்டு நீதிமன்றத் தில் 51க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பான பதில் மனுதாக்க லில்,”தங்கள் நிறுவனத்தின் தடுப் பூசிகள் காரணமாக சிலருக்கு அரிதான சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். அதாவது திராம் போசைட்டோபேனியா சிண்ட் ரோம் (டிடிஎஸ்) எனப்படும் பக்க விளைவுகள் வரலாம். இந்த டிடிஎஸ் மூலம் ரத்த உறைவு மற்றும் குறைந்த ரத்த பிளேட்லெட்டுகள் உற்பத்தியும், கடுமையான தலை வலி, வயிற்று வலி, கால் வீக்கம், மூச்சுத் திணறல் மற்றும் நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.52 கோடி - பாஜக
ஆஸ்ட்ராஜெனிகாவின் ஒப்பு தல் வாக்குமூலத்தால் இந்தி யர்கள் உள்ளிட்ட தடுப்பூசியை செலுத்திக்கொண்ட உலக நாடு களின் மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக மோடி அரசு இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோடி அரசு கருத்து தெரிவிக்காததற்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. அதுயா தெனில் தேர்தல் பத்திரம் மூலம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறு வனத்திடம் பாஜக ரூ.52 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இத னால் தான் இந்த விவகாரம் தொடர் பாக மோடி அரசு அமைதியாக உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
அன்றே மழுப்பிய ஒன்றிய பாஜக அமைச்சர்
கடந்த 2023இல் உலக சுகாதார நிறுவனம் டிடிஎஸ் எனப் படும் கவலை எழுப்பியது. அதன்பிறகு குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் எவ்வித உள்நோய்கள் இல்லாமல் இளம்வய தினர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இதற்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என மருத்துவ வல்லுநர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மனசுக் மாண்டவியா மாரடைப்புக் கும்,தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மழுப்பினார். ஆனால் தற்பொழுது ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் வாக்கு மூலத்தால் ஒன்றிய மோடி அரசின் மழுப்பல் மீது சந்தேகம் வலுத்துள் ளது. வாங்கிய ரூ.52 கோடி நன்கொடை பணத்திற்காக மோடி அரசு அவ்வாறு கூறிய என்ற சந்தேகம் எழுந்துள்ளது.