“இந்தியா” இந்து ராஷ்டிரம் அல்ல என்பதை மக்க ளவைத் தேர்தல் முடிவு கள் நிரூபித்துள்ளன” என உலகின் தலைசிறந்த பொருளாதார நிபு ணர்களில் ஒருவரும், பொருளாதா ரத்துக்காக நோபல் பரிசு பெற்றவரு மான அமர்த்தியா சென் (90) பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவு கள் மற்றும் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அமர்த்தியா சென் அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறுகையில், “இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்பது அனைவருக் கும் தெரிந்த நிலையில், இந்தியா வை “இந்து ராஷ்டிரமாக” மாற்றும் முயற்சிகள் சரியானது அல்ல. “இந் தியா ஒரு இந்து ராஷ்டிரம் அல்ல” என்பதை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் ஒரு மாற்றத்தைக் காண்போம் என்று நாம் எப்போதும் நம்பு கிறோம். ஆனால் முந்தைய ஆட்சி யின் மக்களை விசாரணையின்றி சிறையில் அடைப்பது மற்றும் ஏழை - பணக்காரர் இடைவெளி யை அதிகரிப்பது போன்றவை தொடரவே செய்கின்றன. இவை முற்றிலுமாக நிறுத்தப்பட வேண் டும். குறிப்பாக எனது இளமை காலத்தில் எனது உறவினர்கள் பலர் பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிக் காலத் தில் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். இதிலிருந்து இந்தியா விடுபடும் என்று நம்பி யிருந்தேன். ஆனால் அது நடக்கா மல் போனதற்கு காங்கிரசும் ஒரு காரணம். அவர்கள் அந்த நிலைமை யை மாற்ற முன்வரவில்லை. தற் போதைய பாஜக அரசாங்கத்தின் கீழ் இது நடைமுறையில் தொடர் வது கவலைக்குரிய விஷயமா கவே உள்ளது.
இந்தியாவை இந்து நாடாக சித்தரிக்க ஏராளமான பணம் செல வழித்து ராமர் கோவில் கட்டப் பட்டது. ஆனால் இந்தியாவை “இந்து ராஷ்டிரம்” என்று சித்தரிக் கும் சம்பவங்கள் மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கட்ட மைத்த நாட்டில் நடக்காது. நாட்டின் உண்மையான அடையாளத்தை மறைக்க முயன்றதே, அயோத்தி யை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியை பாஜக இழக்கக் கார ணமானது.இந்தியாவின் உண்மை யான அடையாளத்தை மாற்றும் அனைத்து முயற்சிகளையும் நாடு எதிர்க்கும்” என பாஜகவை கடுமை யாக சாடினார் அமர்த்தியா சென்.