india

img

ஜந்தர் மந்தரில் இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம்

நாடாளுமன்றத்தில் 143 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 146 எதிர்க்கட்சி  எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டித்தும், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதுமீறல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவான அறிக்கை வெளியிடக் கோரியும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தினர். தலைநகர் தில்லில் ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்’, ’அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்’ என்ற பதாகைகளை எந்தி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, என்.சி.பி தலைவர் சரத் பவார், சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, திமுக எம்.பி. திருச்சி சிவா, ஆர்ஜேடி எம்.பி. மனோஜ் ஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.