குறைந்தபட்ச ஆதாரவிலை உள்ளிட்ட12 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப்பிரதேச விவசாயிகள் தில்லியில் நுழைந்து போராட்டம் நடத்துவதற்காக 2 வாரங்களாக ஹரியானா - தில்லி எல்லைகளில் முகாமிட்டுள்ளனர். மோடி அரசின் தாக்குதலில் 3 விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கடந்த 29-ஆம் தேதி தில்லியை நோக்கி பேரணியுடன் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், பஞ்சாப் - ஹரியானா எல்லையில் பஞ்சாப் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் இடைவிடா போராட்டம் நடத்தி வருகின்றனர்.