india

img

முக்கிய செய்திகள் முக்கிய செய்திகள்

கடந்த சில நாட்களாக வடமாநி லங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேக மெடுத்துள்ளது. தில்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த  சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண் ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் 10 ஆண்டு களுக்கு முன்பு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை வெட்டிக் கொன்ற, கொலையாளிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது பரேலி சிறப்பு விரைவு நீதிமன்றம்.

கர்நாடகா மாநிலம் சித்தகங்கா மடத்தில் திரு விழாவிற்கு வந்த 17 வயது சிறுமியை மிரட்டி  மூன்று பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த  சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

“பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள்  மீதான அட்டூழியங்கள் குறித்து அக்கட்சியினர் பேசுவார்களா?” என மேற்கு  வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வியெழுப்பி யுள்ளார்.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில்  துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ள நிலையில், ஜான்பூரில் பிரமோத் யாதவ் என்ற  பாஜக நிர்வாகி பட்டப்பகலிலேயே சுட்டுக்கொல் லப்பட்டார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், வியாழனன்று அவர் பாஜகவில் இணைந்தார்.

உத்தரப்பிரதேசம் பிலிபிட் தொகுதியின் எம்பி யான வருண் காந்திக்கு பாஜக மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்துவிட்டதாக தக வல் வெளியாகியுள்ள நிலையில், மகனுக்கு வாய்ப்பு கிடைக்காவிடில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவரான வருண் காந்தியின் தாய் மேனகா காந்தி பாஜக வில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

தில்லியை நோக்கிய பேரணியின்போது விவ சாயி சுப்கரன் சிங் உயிரிழந்தது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிஷாவை ஆளும் பிஜு ஜனதாதளம் கட்சி 15 ஆண்டுகளுக்கு பிறகு வரவிருக்கும் மக்க ளவை தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுதில்லி
கெஜ்ரிவாலுக்கு 
தில்லி நீதிமன்றம் சம்மன்

ககலால் கொள்கை வழக்கு தொடர்  பாக தில்லி முதல்வர் கெஜ்ரி வாலுக்கு அமலாக்கத்துறை  தொடர்ச்சியாக சம்மன் அனுப்பி நெருக்  கடி அளித்து வரும் நிலையில், 7 சம்மனை  புறக்கணித்துள் ளார். அமலாக்கத் துறை யின் 8ஆவது சம்மன் தொடர்பாக  மார்ச் 12ஆம் தேதிக்கு பின்னர் காணொலி கட்சி வாயிலாக விசாரணைக்கு ஆஜரா கத் தயார் என்றும் தெரிவி த்திருந்த நிலை யில், கெஜ்ரிவால் 6 சம்மனை புறக்க ணித்த பொழுது அமலாக்கத்துறை தில்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 16 அன்று விசாரணைக்கு நேரில்  ஆஜராக வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு தில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் புதி தாக சம்மன் அனுப்பியுள்ளது.