india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஐஆர்சிடிசி இணையதளம் வழியாக முன் பதிவு செய்த பயணச்சீட்டை ரத்து செய்தால், அதற்கு ரிய தொகையை உடனடியாக திரும்ப வழங்க இந்திய ரயில்வே ஏற்பாடு செய்து வருகிறது.ஐஆர்சிடிசி இணையதளம் வழியாக முன் பதிவு செய்த பயணச்சீட்டை ரத்து செய்தால், அதற்கு ரிய தொகையை உடனடியாக திரும்ப வழங்க இந்திய ரயில்வே ஏற்பாடு செய்து வருகிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தீவிர உடல்நலக்குறைவு காரண மாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள  பாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே 5 நாள் பயண மாக வியாழனன்று இந்தியா வந்துள்ளார்.

“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகித்தா லும் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து கள மிறங்கும் ஆம் ஆத்மி கட்சி 8 வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள் ளது. இதில் 5 பேர் தற்போது மாநில அமைச்சர்களா வர்.

வெப் சீரிஸ் மூலம் ஆபாசக் காட்சிகளை தொடர்ந்து வெளியிட்ட 18 ஓடிடி தளங் களை ஒன்றிய அரசு வியாழனன்று முடக்கியது.

அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ)  முக்கியமற்றது என அம்மாநில முதல்வர்  ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளது பாஜக தலை வர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிஏஏ விவகாரத்தில் தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தில்லி ஷஹ்தராவில் கீதா காலனிக்கு அருகில் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள நான்கு மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலத்தில் மைசூரு சமஸ்தானத்தின்  தற்போதைய மகாராஜாவை மைசூரு தொகுதி  மக்களவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர் மார்ச் 22 அன்று தொடங்க உள்ள நிலையில் தில்லி அணியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹாரி பரூக் திடீரென வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

லக்னோ
சமாஜ்வாதியை குறிவைத்து அமலாக்கத்துறை அடுத்தடுத்து சோதனை


மக்களவை தேர்தல் நெருங்கி யுள்ள நிலையில் “இந்தியா” கூட்  டணியின் எழுச்சியை கண்டு  பதறிப்போயுள்ள பாஜக, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டி வரு கிறது. 

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநி லத்தில் “இந்தியா” கூட்டணியில் அங்கம்  வகிக்கும் வலுவான வாக்கு வங்கி  கொண்ட கட்சியான சமாஜ்வாதி கட்சியை  குறிவைத்து அமலாக்கத்துறை அடுத்த டுத்து சோதனை நடத்தி வருகிறது. கடந்த  மாதம் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. கடந்த வாரம் சமாஜ்வாதி எம்எல்ஏ இர்  பான் சோலங்கியை குறிவைத்து அம லாக்கத்துறை சோதனை நடத்தி அவ ரது சொத்துக்களை முடக்கியது. 

இந்நிலையில், உத்தரப்பிரதேச முன்  னாள் அமைச்சரும், சமாஜ்வாதி கட்சி யின் மூத்த தலைவர்களில் ஒருவருமான  காயத்ரி பிரஜாபதி பணமோசடி செய்த தாகக் கூறி அவரது வீடு மற்றும் அவ ருக்கு தொடர்புடைய அமேதி, லக்னோ, தில்லி, மும்பை என 17 இடங்களில் வியா ழனன்று அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. சோதனையில் ரூ.13  கோடி மதிப்புள்ள அவருடைய சொந்த  நிலம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு களை சட்டவிரோத சொத்துக்கள் எனக்  கூறி அமலாக்கத்துறை முடக்கியுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

பாட்னா
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறார் பசுபதி பரஸ்?

முன்னாள் ஒன்றிய அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த பின்பு அவரது மகன்  சிராக் பஸ்வான் மற்றும் சகோதரர் பசுபதி  பரஸ் ஆகிய இருவரையும் தூண்டிவிட்டு  லோக் ஜன சக்தியை இரண்டாக உடைத்  தது. சிராக் பஸ்வான் லோக் ஜன சக்தி பெயர் மற்றும் சின்னத்தை பெற்ற நிலை யில், பசுபதி பரஸ் ராஷ்ட்ரிய லோக் ஜன சக்தி என்ற பெயரையும், புதிய சின்னத்  தையும் பெற்றார். 

இரண்டு கட்சிகளும் பாஜகவிற்கு மிக நெருக்கமாக இருந்த நிலையில், 40  மக்களவை தொகுதியை கொண்ட பீகார்  மாநிலத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி யில் வியாழனன்று தொகுதி பங்கீடு நிறைவு  பெற்றது. அதில் பாஜக 17 தொகுதிகளி லும், ஐக்கிய ஜனதாதளம் 16 தொகுதி களிலும், சிராக் பஸ்வானின் லோக் ஜன  சக்திக்கு 5 தொகுதிகளிலும், எச்ஏஎம் (மாஞ்சி கட்சி) மற்றும் ராஷ்டிரிய லோக் சம்தா (குஷ்வாஹா) கட்சிக்கு தலா ஒரு  தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி (பசு பதி பரஸ்) கட்சிக்கு சீட் வழங்காமல் பாஜக  துரத்தியுள்ளது. இதனால் அவர் விரை வில் பாஜக கூட்டணியில் இருந்து வெளி யேற உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.